மேட்டூர் அணை கடந்த 2 மாதங்களில் 3-வது முறையாக 120 அடியை எட்டியது..!

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக  நீர்பிடிப்பு பகுதிகளில் நீரின் அளவு அதிகரித்து உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இது கடந்த 2 மாதங்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கடந்த 86 ஆண்டுகளில் மேட்டூர் அணை 44-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணை நிரம்பியதால் தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்படும். இதனால் காவிரி … Read more

சேலத்தில் சதுரங்கவேட்டை திரைப்பட பாணியில் மக்களின் ஆசையை தூண்டி மோசடி…! தம்பதியை கைது செய்த போலீசார் ..!

சேலம் மாவட்டத்திலுள்ள சூரமங்கலத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் இவரது மனைவி இந்துமதி. இவர்கள் மத்திய பேருந்து நிலையத்தில் அருகே ஒரு அடுக்கு மாடியில் நிறுவனம் ஒன்றைநடத்தி வருகின்றனர். தனது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 100 நாள்களில் பணம் இரட்டிப்பாகும் என கூறினர். மேலும் தங்கள் நிறுவன தயாரிப்பு பொருள்களான ஊறுகாய் , எண்ணெய்  போன்றவற்றிற்கு டீலர்ஷிப் மற்றும் இதன் மூலம் வெளிநாட்டு ஏற்றுமதி வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும் என மக்களிடம் ஆசை அறிவிப்புகளை அறிவித்துள்ளனர். மணிவண்ணனின் பேச்சைக் கேட்டு … Read more

குளியலறையில் “காப்பாத்துங்க ஹரி” என ரத்தத்தால் எழுதிய மனைவி..! எங்கே எனது மனைவி தவிக்கும் கணவர்..!

சேலம் மாவட்டம் சின்னதிருப்பதி சார்ந்தவர் ஹரிஹரன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. ஹரிஹரன் ஜவுளி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் ஹரிஹரன் வழக்கம் போல வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் மனைவி தமிழ்ச்செல்வி இல்லை வீட்டில் ரத்தக்கறையுடன்  ஹாக்கி ஸ்டிக் ஒன்று வீட்டில் இருந்தது. மேலும் தரையில் சில இடங்களில் ரத்தம் சிந்திக் கிடந்தது  இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர் ஹரிஹரன் வீடு முழுவதும் தமிழ் செல்வியை தேடியுள்ளார். கடைசியாக குளியல் அறையில் சென்று … Read more

மகளின் கண் முன்பு துடிதுடித்து உயிரிழந்த தாய்! சேலத்தில் விபரீதம்!

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த, எபனேசர் ஜெய்சன் என்பவரின் மனைவி கிறிஸ்டி அகஸ்டா ராணி, தனது மகளுடன், சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், கிறிஸ்டி அகஸ்டா ராணி, தாரமங்கலம் அரசு மகளீர் மேல்நிலைப்பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கும் அவரது மகள், கிரேவியை வழக்கம் போல் பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் பின்பாக வந்த லாரியின் டயருக்குள் சிக்கிய கிரேவின் தாயார், கிரேவியின் கண்களுக்கு முன்பதாகவே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இது அப்பகுதியில், பரபரப்பை … Read more

சேலத்தில் மழை நீர் சேகரிப்பிற்கான மக்கள் இயக்கம்! சேலம் மாவட்ட ஆட்சியர் அதிரடி திட்டம்!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில், ஆட்சியர் ரோகிணி ‘மிஷன் ரெயின் கெயின்’ என்ற மழை நீர் சேமிப்பிற்கான மக்கள் இயக்கத்தை துவக்கி வைத்து, நிலத்தடி நீரை சேமிக்கவும், மழைநீரை சேமிக்கவும் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஆட்சியர் ரோகினி அவர்கள் செய்தியாளர்களிடம்  பேசுகையில், மிஷன் 100 என்ற ஏறி திட்டங்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலை மற்றும் நீர் வழித்தடங்கள் தூர்வாரப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Breaking News: சேலத்தில் 30 ரவுடிகள் கைது !பிரபல ரவுடி ஒருவர் என்கவுன்டரில் சுட்டு கொலை

தேர்தல் சமயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகள் கைது செய்யப்பட்ட நிலையில் சேலம் மாவட்டம் காரிபட்டியில் சேர்ந்த  பிரபல ரவுடி கதிர்வேல் .இவர் மீது பல வழக்குகள் உள்ளனர். போலீசாரின் பிடியில் சிக்காத கதிர்வேலை  தேடி போலீஸ் சென்றனர். இந்நிலையில் இன்று காலை கதிர்வேலை சுற்றிவளைக்கப்பட்ட போது போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.இந்த தாக்குதலில் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் படுகாயம் அடைந்தார். ஆய்வாளரை தாக்கிய கதிர்வேல் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.இந்த சம்பவத்தில் கதிர்வேல் உயிரிழந்தார்.இதுவரை 30 ரவுடிகள் … Read more

மிரட்டும் கஜா….!சேலம் பெரியார் பல்கலைக்கழகம் தேர்வுகள் அனைத்தும் ரத்து..!!

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் இன்றைய தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் கரை கடந்து தீவிரமாக மாறி கனமழையாக தமிழகத்தில் அனைத்து இடங்களிம் பெய்து வருவதால் தமிழகத்தில் 23 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி,கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கபட்ட நிலையில் அம்மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலை கழக தேர்வுகள் இன்று நடைபெறவிருந்த நிலையில் தொடர்மழை காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.ரத்து … Read more

திருப்பூர், திருச்சி,சேலம், ஈரோடு ,கரூர் மாவட்ட பள்ளி,கல்லுரிகளுக்கு விடுமுறை..!!

கஜா புயலின் தீவிரம் தொடர் மழையாக மாறியுள்ளதன் காரணமாக திருப்பூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (16.11.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், திருச்சி, ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, தஞ்சை, சிவகங்கை, அரியலூர், திருப்பூர், புதுச்சேரி, காரைக்கால், தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படுள்ள நிலையில் மேலும் கஜா புயல் காரணமாக விருதுநகர், சேலம், ஈரோடு மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை … Read more

முதல்வரின் சொந்த ஊரிலே………முன்னுரிமை அளிக்கப்படாத விளையாட்டு வீராங்கனைகள்……ஜவுளிக்கடையில் வேலை பார்க்கும் அவலம்…!! எடுபடுமா…?? எடப்பாடி வேதனை…!!

தமிழகத்தின் முதல்வராக உள்ளவர் எடப்பாடி கே.பழனிச்சாமி இவருடைய மாவட்டம் சேலம் அம்மாவட்டத்தில் அமைந்துள்ள எடப்பாடி தொகுதி மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முதல்வர் பழனிச்சாமி அதனாலே அவரை எடப்பாடி  பழனிசாமி என்கின்றனர். இந்த நிலையில் முதல்வரின் சொந்த ஊரிலே விளையாட்டு விராங்கணைகள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டு ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வருகின்றனர் என்ற வேதனையான தகவல் ஒன்று வெளியாகி வருகிறது.இதனை தொகுதி எம்.எல்.ஏவும்,முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி நடைவடிக்கை எடுப்பாரா என்று சமூக ஆர்வலர்களும்,வீரங்கனைகளும் கேள்வியுடன் கோரிக்கையும் விடுத்துள்ளனர். கவுண்டம்பட்டியைச் சேர்ந்த ஜவுளி … Read more

8ஆம் வகுப்பு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொடூர கொலை…!!

சேலம் அருகே, எட்டாம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியது மட்டுமின்றி அவரைக் கொடூரமாக படுகொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி சுந்தர புரத்தைச் சேர்ந்த சாமிவேல் – சின்னப்பொண்ணு தம்பதியின் இளைய மகள் ராஜலட்சுமி. எட்டாம் வகுப்பு பயின்று வந்த இம்மாணவியை, அதே பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் என்கிற கார்த்தி என்பவர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு கொடூரமாக கழுத்து அறுத்து கொலை … Read more