திருமங்கலம்:ஒரே எண்ணில் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்..!

திருமங்கலம் தொகுதியில் ஒரே எண்ணில் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்ததால் வாக்கு எண்ணும் மையத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது இன்று காலை 8 மணியில் இருந்து நடைபெற்று வருகின்றன.முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு,அதன் பின்னர் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. அதில்,தற்போது வரையிலான வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி திமுக 153  தொகுதிகளிலும்,அதிமுக 80 … Read more

பாதி விலைக்கு மொபைல் தருவதாக மோசடி செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த காதலர்கள் கைது!

விலை உயர்ந்த மொபைல்களை தாங்கள் பாதி விலைக்கு தருவதாகக் கூறி ஃபேஸ்புக் பக்கத்தில் விளம்பரம் செய்து மோசடி செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த காதலர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சுதாகர் என்பவர் முகநூலில் தனக்கு விலை உயர்ந்த ஒன் பிளஸ் போன் பாதி விலைக்கு வாங்கி தருவதாக கூறி 29 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டதாக அடையாறு சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார். இதேபோல புதிய மாடல் … Read more

ரூ.250 உணவுக்கு ஆசைப்பட்டு ரூ.50,000-ஐ இழந்த பெண்!

கர்நாடகாவில் பெங்களூரில் வசிக்கும் சர்மா என்ற 58 வயதான பெண், ரூ.250-க்கு ஒரு சாப்பாடு வாங்க ஆசைப்பட்டு, ரூ.49,996-ஐ இழந்துள்ளார்.  இன்று பலரும் இணையத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் மீது மோகம் கொண்டுள்ளனர். இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இதில் மோசடியில், ஈடுபடுபவர்களும் பெருகிவருகின்றன. அந்த வகையில், கர்நாடகாவில் பெங்களூரில் வசிக்கும் சர்மா என்ற 58 வயதான பெண் வீட்டில் சமைப்பதில்லை எப்போதுமே ஆன்லைனில் உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கம் கொண்டவர். இதனை அடுத்து … Read more

கள்ளத்தொடர்புடன் விலகியிரு… திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கொலை!

கள்ளத்தொடர்புடன் விலகியிரு, திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கொலை செய்த கொடூரன் கைது. அன்மை காலங்களாகவே கள்ளக் காதலும் அதனால் ஏற்படக்கூடிய கொலைகளும் அதிகரித்துவிட்டது. இந்நிலையில் தற்பொழுது வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த கீழ்கொத்தூர் எனும் கிராமத்தை சேர்ந்த 42 வயதான அன்பு எனும் கட்டிட தொழிலாளிக்கும், உடன் சேர்ந்து வேலை செய்யக்கூடியவர் வத்சலா எனும் கூலி தொழில் செய்யக்கூடிய பெண்ணுக்கும் இடையில் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். நீண்ட ஆண்டுகளாகவே இருவரும் உல்லாசமாக நெருங்கி … Read more

மனைவி துரோகம் செய்ததாக கூறி தலையை வெட்டிக்கொண்டு காவல் நிலையம் சென்ற கணவர்!

உத்திர பிரதேச மாநிலத்தில் மனைவி துரோகம் செய்ததாக கூறி தலையை வெட்டிக்கொண்டு காவல் நிலையம் சென்றுள்ளார் கணவர். தற்போதைய காலத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என அனைத்து குற்றங்களும் அதிகரித்து விட்டது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே எழக்கூடிய பிரச்சினைகள் சுமூகமாக முடிய கூடிய காலம் தற்போது கிடையவே கிடையாது. ஒன்று கொலை அல்லது விவாகரத்து, ஏதாவது ஒன்றில்தான் கணவன் மனைவி பிரச்சனைகள் முடிகிறது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள பாந்தா எனும் மாவட்டத்தில் சின்னார் யாதவ் என்பவர் தனது … Read more

பேடிஎம் சேமிப்பு கணக்கில் இருந்து திருடப்பட்ட பணம்! காவல்நிலையத்தில் புகார்!

பேடிஎம் சேமிப்பு கணக்கில் இருந்து திருடப்பட்ட பணம். இன்று அதிகமானோர் பணம் பரிமாற்றம் செய்வதற்காக பேடிஎம் செயலியை உபயோகித்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை, பார்க்டவுன் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்ற நபர் இந்த செயலியை உபயோகித்து  வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 18-ம் தேதி, இவரது பேடிஎம் சேமிப்பு கணக்கில் வைத்திருந்த ரூ.47, 705 பணத்தை திருடி விட்டதாக, இவரது போனிற்கு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து, ரவிக்குமார், சென்னை பூக்கடை போலீசாருடன் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, … Read more

கழிவறையில் முதியவரை பூட்டி வைத்த தம்பதியினர்! தங்கநகைகளை திருடிக் கொண்டு தப்பியோட்டம்!

கழிவறையில் முதியவரை பூட்டி வைத்துவிட்டு, தங்கநகைகளை திருடிக் கொண்டு தப்பியோட்டம். பெங்களூர், பானஷங்கரி 3-வது தெருவில் உள்ள விவேகானந்தர் தெருவில் வசித்து வருபவர் சுப்பிரமணியநாயுடு (69). இவர் அவரது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வந்த ஒரு தம்பதியினர், தாங்கள் சிவசங்கர் மற்றும் நேகா என்றும், வாடகை வீடு தேடி வந்ததாகவும் அவரிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அந்த பெரியவர் அவர்களுக்கு வாடகை மற்றும் டெபாசிட் குறித்து குறிப்பிட்டார். அப்போது கழிவறைக்கு சென்ற அந்த முதியவரை உள்ளே வைத்து … Read more

ஜாக்கிரதை மக்களே! பீட்சா ஆசையில் ரூ.44 ஆயிரத்தை இழந்த பெண்!

பீட்சா ஆர்டர் செய்த பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.44 ஆயிரம் அபேஸ். பால்கர் மாவட்டம் வசாயை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் ஆன்லைனில் பீட்சா ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இவர் இதற்காக தனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.359-ஐ பரிமாற்றம் செய்துள்ளார். வெகுநேரமாகியும் பீட்சா வராததால் ஆன்லைனில் இருந்த எண்ணை தொடர்புகொண்டு விசாரித்துள்ளார். அப்போது, மறுமுனையில் பேசிய நபர் தன்னை தீபக் சர்மா என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, அந்த பெண்ணிடம் தொழிற்நுட்ப கோளாறு காரணமாக உங்களது ஆர்டர் எங்களுக்கு … Read more

கொரோனா வைரசுக்காக நன்கொடை அளிக்கும் வெளிநாட்டவர்கள்! தந்திரமான முறையில் பண மோசடி!

கொரோனா வைரசுகாக நண்கொடை அளிப்பதாக கூறி ஏமாற்றும் வெளிநாட்டவர்கள். இன்று இணையதளங்களில், பலரும் முகம் அறியாத நட்புக்களால் பலவிதமான தந்திரமான முறைகளில் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் ரமேஷ் (49) என்பவர், வெளிநாட்டவர் ஒருவரிடம்  முகநூல் பக்கத்தில், நண்பர் கோரிக்கையைப் பெற்றார். அவர் அதை ஏற்றுக்கொண்டு தொலைபேசி எண்களை இருவரும் பரிமாறிக் கொண்டார். ஒரு வாரத்திற்குள், அவர்கள் தவறாமல் ஒருவருக்கொருவர் அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள். அந்த நபர் ரமேஷிடம், கொரோனா வைரஸ் நெருக்கடியைச் சமாளிக்க மக்களுக்கு உதவ நன்கொடை … Read more

சேலத்தில் சதுரங்கவேட்டை திரைப்பட பாணியில் மக்களின் ஆசையை தூண்டி மோசடி…! தம்பதியை கைது செய்த போலீசார் ..!

சேலம் மாவட்டத்திலுள்ள சூரமங்கலத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் இவரது மனைவி இந்துமதி. இவர்கள் மத்திய பேருந்து நிலையத்தில் அருகே ஒரு அடுக்கு மாடியில் நிறுவனம் ஒன்றைநடத்தி வருகின்றனர். தனது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 100 நாள்களில் பணம் இரட்டிப்பாகும் என கூறினர். மேலும் தங்கள் நிறுவன தயாரிப்பு பொருள்களான ஊறுகாய் , எண்ணெய்  போன்றவற்றிற்கு டீலர்ஷிப் மற்றும் இதன் மூலம் வெளிநாட்டு ஏற்றுமதி வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும் என மக்களிடம் ஆசை அறிவிப்புகளை அறிவித்துள்ளனர். மணிவண்ணனின் பேச்சைக் கேட்டு … Read more