இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட உ.பி ஹத்ரஸ் கிராமம் சீல் வைப்பு – 144 அமல்!

இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட உ.பி ஹத்ரஸ் கிராமம் சீல் வைக்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ரஸ் எனும் பகுதியில் 19 வயதான பெண் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை உயர்சாதி வகுப்பை சேர்ந்த நான்கு ஆண்கள் கொடூரமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணின் முதுகெலும்புகள் உடைந்த நிலையில், அவரது நாக்கு அறுபட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 14 நாட்களாக உயிருக்கு போராடிய அந்த பெண் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக உயிரிழந்தார். … Read more

நிர்பயா போல் 12 வயது சிறுமி வன்கொடுமை..முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இழப்பீடு.!

டெல்லியில் நிர்பயா போன்று கொடுமைகளை அனுபவித்த 12 வயது சிறுமி. டெல்லி விஹார் பகுதியில் தனது வீட்டில் இருந்த  12 வயது சிறுமி அடையாளம் தெரியாத நபரால் கடுமையாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்த வழக்கு தொடர்பாக போலீசார்  ஒருவரை கைது செய்தனர். பாதிக்கப்பட்டவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் … Read more

கொரோனா மையத்தில் பெண் பாலியல் வன்கொடுமை.! கைது செய்யப்பட்டவருக்கு கொரோனா.!

நவி மும்பையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 40 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மகாராஷ்டிரா போலீசார் தெரிவித்தனர். நவி மும்பையில் பெண் ஒருவர் கொரோனா என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்துள்ளார். அந்த மையத்தில் இருந்த மற்றோருவரின் சகோதரர் பார்வையாளராக வந்துள்ளார்.  அப்போது, அந்தப் பெண்ணை மையத்தில் வைத்து அந்த நபர் , சந்தித்து ஏதாவது தேவையா..? என கேட்டுள்ளார். உதவி வழங்குவதன் மூலம் அந்த பெண்ணிடம் நட்பை வளர்த்து கொண்டார். இந்நிலையில், கடந்த கடந்த … Read more

அறந்தாங்கி சிறுமி வன்கொடுமை கொலை.! ஒருவர் கைது.!

அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்தது  தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே நேற்று வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி இரவு 7 மணி ஆன போதிலும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால், பெற்றோர்கள்  அந்த சிறுமையை பல இடங்களில்தேடிவந்தனர். இதுதொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தனர். இன்று வீட்டில் அருகில் இருந்த வறண்ட குளத்தில் இருந்து சிறுமியின் உடலை போலீசார் … Read more

தூக்க மாத்திரை கொடுத்து மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை.!தற்கொலை செய்ய முயன்ற பெண்.!

தூக்க மாத்திரை கொடுத்து சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பல இடங்களில் சிறுமிகள் உட்பட பலர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பெங்களூரில் உள்ள 40 வயதான ஒருவர் தனது 19 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் தனது தந்தை மற்றும் இரண்டாம் தாயுடன் வசித்து வருகிறார் 19வயதான பெண் . கடந்த … Read more

சிவகாசி சிறுமி வன்கொடுமை வழக்கு.! சிறுமியின் பெற்றோர் நேரில் ஆஜராக உத்தரவு .!

சிவகாசி அருகே உள்ள கொங்களாபுரம் கிராமத்தை சார்ந்த கிருத்திகாவை வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். கிருத்திகா பெற்றோர் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இதையெடுத்து வருகின்ற 26-ம் தேதி நீதிமன்றத்தில்ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். கிருத்திகா என்ற சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ … Read more

இந்த காலத்தில் இப்படி ஒரு நபரா.?உண்மையான காதலை வெளிப்படுத்திய இளைஞன்!

தனது காதலனுடன் தனக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறியதை நம்பி மகிழ்ச்சியுடன் கிளம்பி வந்த இளம்பெண்.காதல்நின் தந்தை செய்த கொடுமை. ஊர் மக்கள் அனைவரையும் வியப்படைய செய்த காதலன். நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் அருகே செம்போடை கிராமத்தை சேர்ந்தவர் கருப்பு நித்தியானந்தம் ஆவார்.அமமுக நிர்வாகியாக உள்ள இவர் ஜவுளி கடை வைத்துள்ளார்.இவரது மகன் முகேஷ் கண்ணன் ஆவார். இவர் கல்லூரியில் படிக்கும் போது தன்னுடன் படிக்கும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.தற்போது இருவரும் … Read more

மன வளர்ச்சி குன்றிய 7 வயது சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள்.!

அரியலூர் மாவட்டம் யுத்தபள்ளம் கிராமத்தை சேர்ந்த கோபி அதே கிராமத்தை சார்ந்த மன வளர்ச்சி குன்றிய 7 வயது சிறுமியை கோபி வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த அரியலூர் மகிளா நீதிமன்றம் குற்றவாளி கோபிக்கு ஆயுள் தண்டனையும் , 10 ஆயிரம் அபராதமும்  விதித்தது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள யுத்தபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி(40). இவர் கிராமத்தை சார்ந்த மன வளர்ச்சி குன்றிய 7 வயது சிறுமி கடந்த 2017-ம் ஆண்டு வன்கொடுமை … Read more

BREAKING :சிவகாசி சிறுமி வன்கொடுமை வழக்கில் அசாம் இளைஞர் கைது.!

சிவகாசி அருகே 8 வயது சிறுமி 21-ம் தேதி வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில்அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜம் அலி என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொங்களாபுரம் கிராமத்தை சார்ந்தவர் சுந்தரம்.இவருக்கு 8 வயதில் கிருத்திகா என்ற மகள் உள்ளார்.இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 20-ம் தேதி கிருத்திகா பள்ளி முடிந்து விட்டு  மாலை வீடு திரும்பிய … Read more

இளம்பெண்ணை வன்கொடுமை செய்து ஆலமரத்தில் தொங்கவிட்ட கொடூரர்கள்.!

கடந்த 31-ம் தேதி தனது சகோதரியுடன் சாலையில் சென்று கொண்டிருந்த போது 4 பேர் கொண்ட கும்பல் அந்த இளம்பெண்ணை கடத்தி சென்றுள்ளனர். ஜனவரி 5-ம் தேதி இளம்பெண் ஒரு ஆலமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 31-ம் தேதி தனது சகோதரியுடன் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அந்த இளம்பெண்ணை கடத்தி சென்றுள்ளனர். இதுகுறித்து அந்த … Read more