இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட உ.பி ஹத்ரஸ் கிராமம் சீல் வைப்பு – 144 அமல்!

இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட உ.பி ஹத்ரஸ் கிராமம் சீல் வைக்கப்பட்டுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ரஸ் எனும் பகுதியில் 19 வயதான பெண் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை உயர்சாதி வகுப்பை சேர்ந்த நான்கு ஆண்கள் கொடூரமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணின் முதுகெலும்புகள் உடைந்த நிலையில், அவரது நாக்கு அறுபட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 14 நாட்களாக உயிருக்கு போராடிய அந்த பெண் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்தது.

இந்நிலையில், அப்பெண்ணின் குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் கூறி வர சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் ப்ரியங்கா காந்தி காங்கிரஸ் எம்பிக்கள் ஆகியோருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்போட்டத்தில் ராகுல் காந்தியை போலீசார் லத்தியால் அடித்தாதாகவும், தள்ளி விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. தடையை மீறி கிராமத்துக்குள் நுழைந்ததாக ராகுல் காந்தி மற்றும் அவருடன் சென்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த கிராமத்தில் 144 உத்தரவு அமல்படுத்தப்பட்டு, கிராமத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal