புல்வாமாவில் நடந்த துப்பாக்கிச் சூடு.. 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!
புல்வாமாவில் நடந்த தாங்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் அமைந்துள்ள கங்கன் என்ற கிராமத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்தத்தகவல்களை அடுத்து, இந்திய ராணுவத்தின் சிறப்பு பாதுகாப்பு படை, 55 ராஷ்டிரிய ரைபிள் மற்றும் காஷ்மீர் போலீசார் ஆகியோர் இணைந்து, இன்று அதிகாலை அப்பகுதியை சுற்றிவளைத்து, தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், சந்தேகத்திற்கிடமான வீட்டில் ராணுவத்தினர் சோதனை நடத்தினர். … Read more