பாகிஸ்தானுடன் அனைத்திற்கும் தடை….உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேட்டி…!!

  • காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
  • உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதி அவர்களை வீழ்த்த வேண்டுமென்று சச்சின் டெண்டுலகர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில்  44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து பாகிஸ்தானுடன் விளையாட்டு மற்றும் அனைத்து தொடர்பையும் இந்தியா துண்டிக்க வேண்டுமென்று பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தாண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா  பாகிஸ்தான் விளையடும் போட்டியில் இந்தியஅணி விளையாடக்கூடாது என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.இது குறித்து BCCI அரசு எடுக்கும் முடிவுக்கு கட்டுபடுவோம் என்று தெரிவித்தது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவிக்கையில் பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் விளையாட மற்றும் வர்த்தக தொடர்பு என எதற்கும் வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.மேலும் BCCI தீவிரவாத நாடுகளுடன் இருக்கும் கிரிக்கெட் தொடர்பை துண்டிக்க வேண்டுமென்று கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment