எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா : 10 ஆண்டுக்கு குறைவாக தண்டனை பெற்ற சிறை கைதியை விடுவிக்க முடியாது!

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர்களை மட்டுமே விடுவிக்க முடியும் என தமிழக அரசின் தலைமை குற்றவியல் நீதிபதி தெரிவித்துள்ளார்.  மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த சிறை கைதிகளை விடுவிக்க வேண்டும் என கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி தமிழக அரசால் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில்,  ஈரோட்டை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மீது தொடரப்பட்ட … Read more

சேலம் மத்திய சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கைதி…!

விசாரணையின் முடிவில், தண்டனை குற்றவாளியாக  அறிவிக்கப்படுவோம் என்ற அச்சத்தில், மத்திய சிறை வளாகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கைதி.  நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அசோக் குமார் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம், 17 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, பாதிக்கப்பட்ட மாணவியின் தயார் அளித்த புகாரின் பெயரில் அசோக் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட … Read more

சிறைக்கைதிகளுடன் மீண்டும் சந்திப்பு -சிறைத்துறை அறிவிப்பு..!

கொரோனா வைரஸ் காரணமாக சிறைகளில் கொரோனா பரவல் தடுக்கும் நடவடிக்கையாக கடந்த மார்ச் 17ஆம் தேதி முதல் சிறைக் கைதிகளை பார்வையிட அவர்களின் உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா  வைரஸ் தாக்கம் குறைந்துள்ள நிலையில் சிறைக்கைதிகளை நலனையும் கருத்தில் கொண்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பார்வையிட அனுமதிவழங்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 14-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கலாம் என கூறப்படுகிறது.  இதனால், சனி , ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களைத் தவிர்த்து மற்ற … Read more

தற்கொலை செய்துகொண்ட சிறைக்கைதியின் வயிற்றுக்குள் கடிதம்!

தற்கொலை செய்துகொண்ட சிறைக்கைதியின் வயிற்றுக்குள் சிக்கிய தற்கொலைக்கான கரணம் கொண்ட கடிதம். மகாராஷ்டிர மாநிலம் நாசிக் எனும் இடத்தில் உள்ள மத்திய சிறையில் அஸ்கர் அலி என்பவர் கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் தண்டனை அனுபவித்து வந்துள்ளார். இந்நிலையில் அண்மையில் இவர் திடீரென சிறைக்குள்ளேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சிறைக்கைதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை … Read more

கைதி பட பாணியில் கைவிலங்குடன் கொரோனா வார்டில் குற்றவாளிக்கு விருந்து!

கொரோனா வார்டில் கைவிலங்குடன் மது அருந்தும் குற்றவாளியின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் எனுமிடத்தில் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்ததாக சாந்து குப்தா என்பவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சிறைக்குச் செல்வதற்கு முன்பாக அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டஅவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியது. இதனை அடுத்து தன்பாத்தில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பதாக சாந்து குப்தா கைவிலங்குடன் கொரோனா வார்டில் மது குடிப்பது போன்றும், … Read more

தந்தை, மகனுக்கு காயம் இருந்தது – சிறைக்கைதி வாக்கு மூலம்.!

கோவில்பட்டி சிறைக்கு வந்தபோது ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் உடலில் காயங்கள் இருந்தன, சிறைக்கைதி ராஜா சிங் வாக்குமூலம். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவருவரின் கொலை வழக்கை  தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இது தொடர்பாக, இந்த வழக்கில் அடுத்தடுத்து போலீசார் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவில்பட்டி சிறைக்கைதி ராஜாசிங் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வாக்குமூலம் ஒன்றை அளித்தார். அதில்  கோவில்பட்டி சிறைக்கு ஜெயராஜ், பென்னிக்ஸ் வரும்போது  அவர்களது பின்புறத்தில் காயங்கள் … Read more