கஜா புயல் மானியம் வாங்கி தருவதாக மோசடி…..போலீசார் தீவிர விசாரணை….!!

கஜா புயல் பாதித்த மக்களுக்கு மத்திய அரசு கடன் தருவதாக கூறி வசூல் செய்த பெண்ணை போலீசார் விசாரித்து வருகின்றனர். நாகை மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் வனிதா. இவர் நாகை புதிய பேருந்து நிலையம் எதிரே கமலம் தொண்டுநிறுவனம் என்று என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார்.இன்னிநிலையில் வனிதா கடந்த சில தினங்களுக்கு முன் புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்று புயல் பாதித்த மக்களிடம் மத்திய அரசு 50 ஆயிரம் கடன் வழங்குவதாகவும் அதில் 25 ஆயிரம் மானியம்மாதம் ஆயிரத்து 500 … Read more

காவல்துறையில் கருப்பு ஆடுகள்….எச் ராஜா கண்டனம்…!

சமூக வலைதளங்களில் மத வெறி தொடர்பாக கருத்து தெரிவித்ததாகக் கூறி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜக நிர்வாகிகள் கல்யாணராமனை எச் ராஜா நேரில் சந்தித்து பேசினார்.அப்போது சிறைக்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறுகையில் இந்த நாட்டில் தேசியவாதி என்றால் கருத்துரிமை மறுக்கப்படும். மேலும் ஹிந்து மதத்தையும் பிரதமரையும் இழிவுபடுத்திய லயோலா கல்லூரி முதல்வர் மற்றும்  ஓவியர் முகிலன் ஆகியோரை ஏன் இதுவரை கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.மேலும் அவர் லயலோ கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சகாயத்தின் … Read more

தூத்துக்குடியில் DYFI போராட்டம்…..கைது செய்து மண்டபத்தில் வைத்தது காவல்துறை…!!

தூத்துக்குடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று கீழ்காணும் கோரிக்கைக்களை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் அவர்கள் அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்  , அரசனை (G.O ) 56_யை இரத்து செய்ய வேண்டும் , அரசு ஊழியர்கள் போராட்டாத்தில் ஈடுபாடாதல் கைது செய்யப்பட்ட  ஜாக்டோ_ ஜியோ நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற முழக்கங்களளை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். … Read more

சிறுமியை சித்தரவதை செய்த நடிகை…போலீஸ் வழக்கு பதிவு…!!

சிறுமியை வீட்டில் அடைத்து சித்திரவதை செய்த புகாரில் நடிகை பானுப்ரியா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிரபல நடிகை பானுப்ரியா தன்னுடைய வீட்டில் ஆந்திராவை சேர்ந்த ஒரு சிறுமியை வேலைக்கு வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சிறுமியின் தாய் தன்னுடைய மகளை நடிகை பானுப்ரியா கொடுமை செய்ததாக கூறி ஆந்திர மாநிலம் சாமரலக்கோட்டாயில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்திதார். அந்த புகாரில் தனது மகளுக்கு நடிகை பானுப்ரியா, முறையாக சம்பளம் தரவில்லை, தன்னுடைய மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும் கூறியிருந்தார். இதையடுத்து நடிகை பானுப்பிரியா மீது … Read more

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு…தேர்தல் ஆணையம் போலீஸில் புகார்…!!

வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்யலாம் என கூறிய சையத் சுஜா மீது டெல்லி காவல்துறையில்  தேர்தல் ஆணையம் புகார் அளித்துள்ளது. சைபர் பிரிவு நிபுணரான சையத் சுஜா, 2014-ம் ஆண்டு தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யமுடியும்.கடந்த தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்பட்டது என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரம் வடிவமைக்கும் குழுவில் தாம் இடம்பெற்றதாகவும் எனக்கு ஹேக் பண்ணுவது பற்றி எனக்கு தெரியும் என்று லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்தார். இந்நிலையில் வாக்குப்பதிவு … Read more

போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஜினி…!!

ரஜினி நடித்து பொங்கலுக்கு வெளியாகி திரையரங்கில் வெற்றி நடை போடும் படம்  `பேட்ட’ . இந்த படத்தையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற பிப்ரவரி மாதம் துவங்க இருப்பதாக  கூறப்படுக்கிறது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி போலீஸ் நடித்து இதற்கு முன்பாக வெளியாகிய படமாக்கிய மூன்று முகம், பாண்டியன், கொடி பறக்குது உள்ளிட்ட படங்களை அடுத்து … Read more

25 லட்சம் மதிப்பிலான குட்கா போதைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார்…!!

வேலூர் அரக்கோணம் அருகே 25 லட்சம் மதிப்பிலான குட்கா, பான்மாசாலா  உள்ளிட்ட போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அரக்கோணம் அடுத்த கடம்பநல்லூர் கிராமத்தில் தக்கோலம் பகுதியில் தனியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு  தகவல் கிடைத்தது. இதையடுத்து இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், அந்த காரை சோதனை செய்ததில் 25 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போதைப்பொருள் கடத்த … Read more

திருவாரூர் இடைத்தேர்தல் : வாகன சோதனையில் காவல்துறையினர் தீவிரம்

திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளதை தொடர்ந்து, காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கு ஜனவரி 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆனையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, திருவாரூர் தொகுதி முழுவதும் தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், தொகுதி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டி வருகின்றனர். இதையடுத்து, நன்னிலம் காவல்துறையினர் கங்களாஞ்சேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

10 திருக்குறளை பிழை இல்லாமல் எழுத சொல்லும் சூப்பர் டிராபிக் போலீஸ்…!!

பொதுவாக டிராபிக் போலீஸ் எல்லோரும் ஹெல்மெட், லைசன்ஸ், இன்சூரன்ஸ் ஆகியவற்றை தான் கேட்பார்கள். இதில் ஏதாவது ஒன்று இல்லைன்னு சொன்னாலும் பைன் போடுவது வழக்கம். ஆனால் பெரம்பலூரில் பணியாற்றி வரும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாவுக்கரசன், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது வினோதமான தண்டனை வழங்கி வருகிறார். அது என்ன தண்டனை தெரியுமா… 10 திருக்குறளை பிழை இல்லாமல் எழுதுவது தான். அப்படி 10 திருக்குறளை பிழையில்லாமல் எழுதினால் எந்தவித அபராதம் இன்றி அவர்களை விட்டுவிடுகிறார். அதுமட்டுமின்றி … Read more

காவலர் பணி தேர்வுக்கு முன் வெளியான வினாத்தாள்..!! தேர்வுகள் ரத்து..!

காவலர் பணிக்கான தேர்வு வினாத்தாள் முன்னதாகவே வெளியாகிய நிலையில் நடைபெறவிருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் 9713 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக  8 லட்சத்து 75 ஆயிரம் பேர் விண்ணப்பித்தவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுவுக்கான வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் வினாத்தாள் மற்றும் விடைகள் வெளியான விவரம் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இந்த தேர்வு பிற்பகல் 3 மணிக்கு நடைபெற இருந்த நிலையில் சில மணி நேரங்கள் முன்னரே வெளியாகியது.இது குறித்து அம்மாநில முதலமைச்சர் விஜய் ருபானி தேர்வை ரத்து … Read more