தூத்துக்குடியில் DYFI போராட்டம்…..கைது செய்து மண்டபத்தில் வைத்தது காவல்துறை…!!

தூத்துக்குடியில் DYFI போராட்டம்…..கைது செய்து மண்டபத்தில் வைத்தது காவல்துறை…!!

தூத்துக்குடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று கீழ்காணும் கோரிக்கைக்களை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் அவர்கள் அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்  , அரசனை (G.O ) 56_யை இரத்து செய்ய வேண்டும் , அரசு ஊழியர்கள் போராட்டாத்தில் ஈடுபாடாதல் கைது செய்யப்பட்ட  ஜாக்டோ_ ஜியோ நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற முழக்கங்களளை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்க்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் M.S முத்து , மாவட்ட பொருளாளர் டேனியல் மற்றும் வாலிபர் சங்க தலைவர்கள் பங்கேற்றனர்.போராட்டம் நடத்திய அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *