புல்லட் வெஸ்டை துளைத்த புல்லட்.! மயிரிழையில் உயிர்பிழைத்த காவலர்!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள நால்பந்த் பகுதியில் கான்ஸ்டபிள் விஜேந்திர குமார் என்பவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது போராட்டக்காரர்கள்  துப்பாக்கியால் சுட்டதால் கான்ஸ்டபிள் விஜேந்திர புல்லட் வெஸ்டை புல்லட் துளைத்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் உத்தரப்பிரதேசத்தில் வலுவு பெற்று வருகிறது. போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தும் பணியைக் காவல்துறையினர்ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள நால்பந்த் பகுதியில் கான்ஸ்டபிள் விஜேந்திர குமார் என்பவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது போராட்டக்காரர்கள் … Read more

ஏடிஎம்மில் பணம் நிரப்பும் நேரத்தில் ரூ.52 லட்சம் எடுத்து சென்ற கார் டிரைவர் .!

கடந்த 19-ம் தேதி ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்து ஏடிஎம் இயந்திரங்களுக்குப் பணம் நிரப்ப  ரூ.87 லட்சம் பணம் கார் மூலம் அனுப்பப்பட்டது. ஏடிஎம்மில் பணநிரப்பும் ஊழியர்கள் பணத்தை எடுத்து கொண்டுஏடிஎம் சென்று உள்ளனர்.  காரில் தனியாக இருந்த டிரைவர் ரூ.52 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு சென்று விட்டார். கடந்த 19-ம் தேதி சென்னை  தி.நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்து ஏடிஎம் இயந்திரங்களுக்குப் பணம் நிரப்ப  ரூ.87 லட்சம் பணம்  கார் மூலம் அனுப்பப்பட்டது. … Read more

போலீசாரை கடித்து விட்டு தப்பியோடிய கள்ளச்சாராய வியாபாரி.!

பட்டுக்கோட்டையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருவோணத்தில் போலீசாரை கத்தி மற்றும் கட்டையை காட்டி மிரட்டியும், பல்லால் கடித்து தப்பியோடிய கள்ளச்சாராய வியாபாரிகளை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த புதுவிடுதியைச் சேர்ந்த இளங்கோவன், அருண்பாண்டியன் இருவரும் சேர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசாருக்கு தகவல் தெரிந்தது. பின்னர் அவர்கள் திருவோணத்தில் இருப்பதை அறிந்த போலீசார் அங்கு சென்றபோது அவர்கள் கட்டை மற்றும் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். இந்நிலையில், … Read more

தேர்தல் முடியும் வரை போலீசாருக்கு விடுமுறை கிடையாது..!

பல்வேறு கட்சி தொண்டர்களும் தேர்தல் வேலையில் ஈடுபடுவதால் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு அதிகரிக்க தேர்தல் கமிஷன் உத்தரவு. 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டியதால் போலீஸாருக்கு தேர்தல் முடியும் வரை விடுமுறை கிடையாது. தமிழகத்தில் வருகின்ற 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 -ம் தேதி நடைபெற உள்ளது. உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் தேர்தல் … Read more

சிறுமியை பலாத்காரம் செய்த ஏட்டு உட்பட 4 பேருக்கு வலை..!

16 வயது சிறுமி நிமாபரா பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த 4 பேர் போலீஸ் குடியிருப்பிருக்கு கடத்தி சென்று அந்த சிறுமியை 4 பேரும் பாலியல் பலாத்காரம் செய்தனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு ஜிதேந்திர சேத்தி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஐதராபாத்தில் கடந்த வாரம் கால்நடை மருத்துவர் பிரியங்கா 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை … Read more

மேட்டுப்பாளையத்தில் போராட்டம் ..! போலீசாருக்கும் ,பொதுமக்களும் இடையே தள்ளுமுள்ளு ..!

கடந்த 4 நாள்களாக மழை நீடித்து வரும் நிலையில் மேட்டுப்பாளையத்தில் உள்ள நடூர் பகுதியில் உள்ள ஏடி காலனியில் உள்ள குடியிருப்பின் 20 அடி உயர கருங்கல் சுவர்  சாய்ந்ததால் இன்று அதிகாலை 3 மணி அளவில் நான்கு வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த சம்பவத்தின் போது  வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 17 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் 17 பேர்  உடலை மீட்டனர். … Read more

போக்ஸோ சட்டத்தில் போலீசார் கைது..!

திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வெறையூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் இவர் தச்சம்பட்டு காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மணலூர்பேட்டை சார்ந்த விமலா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில்  மணிகண்டனுக்கு , ஒரு மைனர் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது விமலாவுக்கு தெரியவர இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விமாலா இரண்டு வாரங்களுக்கு முன் திருவண்ணாமலையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். … Read more

இடைத்தேர்தல்..! 150 ரவுடிகளை அழைத்து போலீசார் எச்சரிக்கை..!

கர்நாடகவில் உள்ள காங்கிரஸ் கட்சியை சார்ந்த 14 ,மதசார்பற்ற ஜனதாதன கட்சியை சார்ந்த 3 எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு ஆதரவாக செலயல்பட்டதால் எம்எல்ஏக்களை முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்தார். இதைத்தொடர்ந்து 17 அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் 17 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது சரியே என தீர்ப்பு அளித்தது. மேலும் 2 பேரின் வெற்றி ஏற்கனவே செல்லாது என வழக்கு உள்ள நிலையில் மீதம் முள்ள … Read more

சபரிமலை : தந்தையுடன் வந்த 12 வயது சிறுமியை தடுத்து நிறுத்திய போலீசார்..!

சபரிமலையில் ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் சென்று கொண்டு இருக்கின்றனர். பம்பை மற்றும் நிலக்கல் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு  பெண் பக்தர்களின் வயது சான்றிதழை சரிபார்த்தபின்  கோவிலுக்கு செல்ல அனுமதி கொடுக்கின்றனர். அதிலும் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் நீதிமன்றத்தின் அனுமதி கொடுத்த பிறகே கேரளா போலீசார் சபரிமலைக்கு செல்ல அனுமதி கொடுக்கின்றனர்.அனுமதி இல்லாமல் வரும் பெண்களை போலீசார் திருப்பி அனுப்புகின்றனர். இந்நிலையில் இன்று தமிழகத்தை சார்ந்த 12 வயது சிறுமி … Read more

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, விபரீதமான செயலில் ஈடுபட்ட காவலர்!

உத்திர பிரதேசத்தில், உதவி காவல் ஆய்வாளர் விஜய் பிரதாப்-க்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்த காவலர் நடந்து கொண்ட விதம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் உதவி ஆய்வாளர் முதலில் பணியாற்றிய காவல் நிலையத்தில் இருந்து, புதிதாக பணியிடமாற்றம் செய்யப்பட்ட காவல் நிலையத்திற்கு ஓடியே சென்றுள்ளார். 65 கி.மீ தூரம் ஓடியே சென்ற இவர் சாலையில் மயங்கி விழுந்துள்ளார். இதுகுறித்து, விஜய பிரதாப் அவர்கள் கூறுகையில், உயரதிகாரிகள் சர்வாதிகார போக்கை … Read more