விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர்

பிரதமரின் விவசாயிகளுக்கான ஆதரவு நிதி திட்டத்தின் கீழ் பணம் பெற்று வரும் விவசாயிகள் ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை வருகின்ற 15-ஆம் தேதிக்குள் http://pmkisan.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவ நிதித் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை … Read more

விவசாயிகளுக்கு நாளை ரூ.19,500 கோடி விடுவிக்கிறார் பிரதமர் மோடி!!

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் நாளை 9.75 கோடி விவசாயிகளுக்கு ரூ.19,500 கோடி விடுவிக்கிறார் பிரதமர் மோடி. பிரதமர் மோடியால் கடந்த 2019-ஆம் ஆண்டு பிரதமரின் விவசாயிகள் சம்மான் நிதி (பிஎம் – கிசான்) தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 4 மாதங்களுக்கு ஒரு முறை, மூன்று தவணைகளில் தலா ரூ.2000 என வருடத்துக்கு ரூ.6000 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. இந்த நிலையில், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு … Read more

பிரதமர் கிசான் திட்டம் : விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.6,000 நிதியுதவி…! இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…!

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ், விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.6,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை இன்று 11 மணியளவில் காணொலிக் காட்சி வாயிலாக, பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ், விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.6,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை இன்று 11 மணியளவில் காணொலிக் காட்சி வாயிலாக, பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின்போது விவசாய பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடலிலும் ஈடுபடுவார். இந்த விழாவில் மத்திய வேளாண் அமைச்சரும் கலந்து … Read more

பிரதமர் கிசான் திட்டம் – ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை ரூ.38,000 கோடி விடுவிப்பு.!

கடந்த 5 மாதங்களில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.38,282 கோடியை மத்திய அரசு செலுத்தியுள்ளது என்றும் மத்திய வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நேற்று இரண்டாவது நாளான அவையில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது. அப்போது, திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் பிரதமர் கிசான் திட்டம் மோசடி குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், கிஸான் திட்டத்தில் கடந்த கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான … Read more

ஆளும் அதிமுக தலைவர்களின் உதவி இன்றி நடந்திருக்க முடியாது – கனிமொழி

கிஸான் திட்டத்தில்   5 லட்சம் போலி பயனாளிகள் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதென்பது, ஆளும் அதிமுக தலைவர்களின் உதவி இன்றி நடந்திருக்க முடியாது என்று கனிமொழி தெரிவித்துள்ளார். பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கரூர், வேலூர் போன்ற மாவட்டங்களில் கிசான் திட்டத்தில் விவசாயிகள் அல்லாதோரும் சேர்க்கப்பட்டு பயனடைந்ததாக அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து பல்வேறு அதிகாரிகள் சஸ்பெண்ட் … Read more

கிசான் திட்ட முறைகேடு: யாரும் தப்ப முடியாது – ககன்தீப் சிங் பேடி விளக்கம்.!

கிசான் திட்ட முறைகேட்டில் தொடர்புடைய 80 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது என்று வேளாண் துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பலர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கிசான் திட்டத்தில் மூன்று பருவமாக பயணாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இந்தியாவில் அனைத்து விவசாய குடும்பங்களுக்கும் … Read more

கிசான் திட்டம் முறைகேடு: குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது – முதல்வர் பழனிசாமி

கிசான் திட்டத்தில் தவறு நடந்த இடங்களில் குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கரூர், வேலூர் போன்ற மாவட்டங்களில் கிசான் திட்டத்தில் விவசாயிகள் அல்லாதோரும் சேர்க்கப்பட்டு பயனடைந்ததாக அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து பல்வேறு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கிசான் திட்டத்தில் மோசடி செய்தவர்களின் … Read more

கிசான் திட்டத்தில் முறைகேடு – விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி.!

பிரதமரின் கிசான் திட்ட மோசடி தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் சிபிசிஐடி ஆய்வாளர் தீபா தலைமையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு அதிக அளவில் நடைபெற்று இருப்பதால் தற்காலிகமாக இந்த திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அந்தந்த மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு வேளாண்மை துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி தெரிவித்திருந்தார். இதனால் பல மாவட்டங்களில் பிரதமர் கிசான் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டடு, விசாரணை நடைபெற்றது வருகிறது. … Read more

போலியாக சேர்ந்த 1500 பேர், 60 லட்சம் ரூபாய் இழப்பு- கிசான் திட்டத்தில் தொடர்ந்து முறைகேடு.!

கரூரில் பிரதமர் கிசான் திட்டத்தில் போலியாக 1500 பேர் சேர்க்கப்பட்டது மற்றும் ரூ.60 லட்ச மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டு நிதி வழங்கப்படும் கிசான் திட்டத்தில், 8 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 78,517 விவசாயிகள் பயனாளிகளாக உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை 3,282 பேர் விவசாயிகளாக பதிவு செய்துள்ளனர். அதில், சுமார் 1,500 பேர் போலி என தெரியவந்துள்ளது. அவர்களுக்கு இரண்டு தவணைகள் வழங்கப்பட்ட நிலையில், … Read more