கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள் தேவைக்கேற்ப தீவிரப்படுத்தப்படும் – தலைமைச் செயலாளர்

தமிழகத்தில் கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள் தேவைக்கேற்ப தீவிரப்படுத்தப்படும் என தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில் கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் காணொளி மூலம் கலந்துகொண்டபின் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் கொரோனாவை தடுக்க தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக … Read more

ஜெயலலிதா இல்ல வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு – உயர்நீதிமன்றம்

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் தொடர்பாக தீபக், தீபா தொடர்ந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம். வேதா நிலையத்தின் நிலம் கையகப்படுத்தியது, இழப்பீடு நிர்ணயித்ததற்கு எதிரான வழக்கில் விசாரணை முடிவு பெற்றது. ஜெ.தீபா, ஜெ.தீபக் மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து. ஜெயலலிதா வாரிசான தன்னிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று மனுதாரர் ஜெ.தீபக் தெரிவித்துள்ளார். ஒப்புதலே அளிக்காத போது ரூ.67.90 கோடி இழப்பீடு நிர்ணயித்தது சட்டவிரோதம் என ஜெ.தீபா தனது … Read more

#BREAKING: 9,10,11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் உத்தரவுக்கு தடையில்லை – உயர்நீதிமன்றம்

9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு போடப்பட்ட ஆல் பாஸ் உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் குறைந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதையடுத்து தமிழகத்தில் 9,10,11ம் வகுப்பு மாணவர்கள் பொதுதேர்வின்றி அனைவரும் தேர்ச்சி பெறுவதாக முதல்வர் பழனிசாமி கடந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்திருந்தார். பின்னர் அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பிற்கு முன்பாக தமிழக அரசு எந்த கலந்தாலோசனையும் செய்யவில்லை என்றும் … Read more

#Breaking: தமிழகத்தில் 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை – தமிழக அரசு உத்தரவு.!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 9,10,11 வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை என்று தலைமை செயலாளர் அறிவிப்பு. தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து நாள் ஒன்றுக்கு பாதிப்பு எண்ணிக்கை 1000-ஐ கடந்து வருவதால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக வரும் திங்கள் கிழமை முதல் 9,10,11ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை என்று தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அறிவித்துள்ளார். 9,10,11ம் … Read more

ஜெயலலிதா அறக்கட்டளை – அரசு பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறக்கட்டளை சட்டத்தை எதிரித்து தீபா தொடர்ந்து வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறக்கட்டளை சட்டத்தை எதிரித்து தீபா தொடர்ந்து வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தீபக் தொடர்ந்து வழக்கோடு தீபாவின் வழக்கும் விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா அறக்கட்டளை தொடர்பான வழக்குகள் இரு நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் உள்ளதால், தீபா மற்றும் தீபக் தொடர்ந்த வழக்குகளும் விசாரிக்கப்படுகிறது.

மீண்டும் ஊரடங்கா? கொரோனா பாதிப்பு படிப்படியாக உயரக் கூடும் – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்.!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயரக் கூடும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், நேற்று தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பல்வேறு விதமான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,  தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேர் பாதிப்பு என்கிற நிலை கவலையளிக்கிறது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைவரும் தவறாமல் முககவசம் … Read more

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா., மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் நிச்சயம் – தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் படிப்படியாக உயர்ந்து ஒரு நாள் பாதிப்பு 800-ஐ தாண்டி வருகிறது. கடந்த ஆண்டை போல் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு நடவடிககைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், இன்று காலை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், தலைமை செயலாளர் … Read more

பாதாள சாக்கடை மரணம் – மாநகராட்சி, நகராட்சியே பொறுப்பு – சென்னை உயர்நீதிமன்றம்

பாதாள சாக்கடை பணிகளின்போது ஏற்படும் மரணங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே பொறுப்பு. பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறங்கச் செய்யும் நடைமுறையை தடுத்து நிறுத்த எடுத்த நடவடிக்கை என்ன? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பாதாள சாக்கடை பணிகளின்போது ஏற்படும் மரணங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே பொறுப்பு என கூறியுள்ளது. மரணங்கள் நிகழ்ந்தால் சம்மந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்படுவர் என தெளிவுப்படுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் … Read more

கழிவுகளை மனிதர்களே அகற்றுவது மனிதத்தன்மையற்றது – உயர்நீதிமன்றம்

கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தும் மனிதத்தன்மையற்ற செயல் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தும் மனிதத்தன்மையற்ற செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மனிதர்களை ஈடுபடுத்தும் நடைமுறை தொடர்கிறதா? இல்லையா? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

#BREAKING: வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு – தடை விதிக்க மறுப்பு

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.  கடந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வன்னியர்களுக்கு 10.5% உல் ஒதுக்கீடு வழங்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதற்கு ஒருபக்கம் எதிர்ப்பும் மறுபக்கம் அனைத்து சமூகத்திற்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்றும் சாதிவாரியாக கணக்கீடு நடத்தப்பட்ட பிறகு தான் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் பல விமர்சனங்கள் எழுந்தன. மேலும் இதுகுறித்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வன்னியர்களுக்கு … Read more