#BREAKING: ஆன்லைன் வழியிலேயே கல்லூரி தேர்வுகள் – உயர்கல்வித்துறை!

பிப்.1-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் தேர்வே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை விளக்கம். தமிழகத்தில் தற்போது கொரோனா பாதுகாப்பு மையங்களாக (Covid Care Centre) செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து, ஏனைய அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டியிருந்தது. இதற்கான உரிய முன்னேற்பாடுகளை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் … Read more

#BREAKING: B.E, B.Tech செமஸ்டர் தேர்வு – அட்டவணையை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்!

ஆன்லைனில் நடைபெறும் செமஸ்டர் தேர்வு பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கி மார்ச் முதல் வாரம் நிறைவடைகிறது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. B.E, B.Tech, மற்றும் B.Arch மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 1 முதல் மார்ச் முதல் வாரம் வரை காலை, மாலை என இருவேளைகளிலும் தேர்வுகள் நடைபெறும். பிப்ரவரி 1 முதல் தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், பாடவாரியாக அட்டவணையை வெளியிட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து, மற்ற … Read more

ஆன்லைன் தேர்வு: விடைத்தாள் மதிப்பீடு எவ்வாறு? – உயர்கல்வித்துறை புதிய அறிவிப்பு!

மாணவர்கள் வாட்ஸ் அப், மின்னஞ்சல் வாயிலாக அனுப்பும் விடைத்தாள்கள் மற்றும் அஞ்சல் வாயிலாக அனுப்பும் விடைத்தாள்களும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே விடைத்தாள்கள் மதிப்பீடு. ஆன்லைன் தேர்வு மற்றும் விடைத்தாள் மதிப்பீடு குறித்து உயர்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ஆன்லைன் தேர்வில், மாணவர்கள் WhatsApp-ல் அனுப்பும் விடைத்தாள்களும், நேரடியாக Courier மூலம் அனுப்பும் விடைத்தாள்களும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே Valuation செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. ஆன்லைன் தேர்வு முடிந்த பின் மாணவர்கள் விடைத்தாள்களை வாட்ஸ்அப் … Read more

#BigBreaking:”இவர்களுக்கு பிப்.1 முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு” – அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு!

சென்னை:தமிழகத்தில் அனைத்து தனியார் மற்றும் அரசு கல்லூரி மாணவர்களுக்கு பிப்.1 முதல் பிப்.20 வரை ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில்,கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது தொடர்பாக மாணவர் பிரதிநிதிகளுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு … Read more

மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து – தமிழக காவல்துறை!

ஆன்லைன் தேர்வுகள் நடத்தக்கோரி போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் மீதான 12 வழக்குகள் வாபஸ். ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவின் பேரிலும், மாணவர்களின் எதிர்கால நலன் கருதியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. ஆன்லைன் தேர்வுகள் நடத்தக்கோரி போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் மீதான 12 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

#Breaking:இனி கல்லூரிகள்,பல்கலைக்கழகங்களில் இந்த தேர்வு முறை கிடையாது” – யுஜிசி முக்கிய அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இனி ஆன்லைன் தேர்வு முறை கிடையாது என்று யுஜிசி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வுகள் இனி ஆன்லைன் முறையில் கிடையாது என்றும் மாறாக,இனி நேரடியாக எழுத்து தேர்வாகவே நடத்தப்பட வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) அறிவித்துள்ளது.அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் தனது கடிதம் மூலம் இதனை அறிவுறுத்தியுள்ளார். மேலும்,கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி … Read more