கல்லூரிக் கல்வி இயக்குநர் மாற்றம் – உயர்கல்வித்துறை அறிவிப்பு

கல்லூரிக் கல்வி இயக்குநர் பூரணச்சந்திரனை நியமித்தது செல்லாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, ஊட்டி அரசுக் கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி, கல்லூரிக் கல்வி இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இன்று தொலைதூரக் கல்வி தேர்வு ரிசல்ட் – சென்னைப் பல்.கழகம் அறிவிப்பு;லிங்க் இதோ!

தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என  சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகம் இருந்து வந்தது.கொரோனா பரவலின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்த  நிலையில்,தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து, தேர்வுகள் நடத்தப்பட்டு  வருகிறது. இந்த நிலையில்,தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என சென்னைப்  பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.2021 டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகள் இன்று மாலை … Read more

#Breaking:10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடல் – அண்ணா பல்.கழகம் அறிவிப்பு!

தமிழகத்தில் சமீபகாலமாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில்,வருகின்ற கல்வியாண்டுக்கான அங்கீகாரம் பெறுவதற்கு 10 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்கவில்லை என்பதனால் அவை வரும் கல்வியாண்டு முதல் மூடப்படவுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக,போதிய மாணவர்கள் இல்லாத காரணத்தினால்,வருகின்ற கல்வி ஆண்டிற்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை நாங்கள் நடத்தவில்லை என்று கூறி தமிழகத்தில் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் கடிதம் அனுப்பியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தின்  கீழ் 494 தனியார் கல்லூரிகள் … Read more

#Breaking:மகிழ்ச்சி…சான்றிதழ் பெற பழைய கட்டணமே வசூல் -அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

மாணவர்களின் கிரேடு,மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால்,புதிய சான்று பெறுவதற்கான கட்டணத்தை 10 மடங்கு உயர்த்தி அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு விடுத்திருந்தது. அதன்படி,தொலைந்துபோன கிரேட் Grade / Mark Sheet-ஐ மீண்டும் பெற ரூ.300-ஆக இருந்த கட்டணம் ரூ.3,000-ஆகவும்,டிகிரி சான்றிதழுக்கான (Degree Certificate) கட்டணம் ரூ.3,000-ல் இருந்து ரூ.5,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.2-ஆம் முறையாக சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பதற்கு கட்டணமாக ரூ.10,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆனால்,அண்ணா பல்கலைக் கழகம் கட்டணத்தை உயர்த்தியதற்கு மாணவர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில்,தொலைந்து போன சான்றிதழைப் … Read more

#Breaking:இந்த பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கையிலும் 69% இடஒதுக்கீடு – தமிழக அரசு அரசாணை!

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 69% இட ஒதுக்கீடு பின்பற்ற அரசாணை. அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோர்,இதர  பிற்படுத்தப்பட்டோருக்கு இதுவரை அகில இந்திய ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இந்நிலையில்,திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கையில் அகில இந்திய  ஒதுக்கீட்டில் 69% இட ஒதுக்கீட்டை பின்பற்ற தமிழக அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி,நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 69% இட ஒதுக்கீடு … Read more

#BigBreaking:”இவர்களுக்கு பிப்.1 முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு” – அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு!

சென்னை:தமிழகத்தில் அனைத்து தனியார் மற்றும் அரசு கல்லூரி மாணவர்களுக்கு பிப்.1 முதல் பிப்.20 வரை ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில்,கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது தொடர்பாக மாணவர் பிரதிநிதிகளுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு … Read more

#BREAKING : தமிழகத்தில் மேலும் 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 13 மாவட்டங்களில்  பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தமிழகத்தில் மேலும் 5 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, 13 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி … Read more

#BREAKING : நாளை 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 7 மாவட்டங்களில் பள்ளிக்கும் விடுமுறை..!

நாளை தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும்;7 மாவட்டங்களில் பள்ளிக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 7 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை அதிகன மழை … Read more

#BREAKING: ஜன.20-க்கு பிறகு நேரடி செமஸ்டர் தேர்வுகள்-தமிழக அரசு..!

ஜன.20ஆம் தேதிக்கு பிறகு நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் அமைச்சர் பொன்முடி கொரோனா கால கட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு, ஆன்லைனில் தேர்வுகளும் நடைபெற்றது. தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் கல்லூரிகளில் வகுப்புகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறுகிறது. சமீபத்தில் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஆன்லைனில் பாடம் நடத்தினால், ஆன்லைனில் தேர்வுகள் நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். … Read more