கமல்ஹாசன் கோவைக்கு பயணத்தின் போது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை..!

கோவைக்கு பயணத்தின் போது கமல்ஹாசன் பொது மற்றும் அரசியல் நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை. கோவை மக்களைச் சந்திப்பதற்காக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் நாளை கோயம்புத்தூர் செல்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்  என் நேசத்திற்குரிய கோவை மக்களைச் சந்திப்பதற்காகவும், மக்கள் நீதி மய்யம் சார்பாக சில நலத்திட்டங்களைத் துவக்கி வைப்பதற்காகவும் நாளை கோயம்புத்தூர் வருகிறேன். இரண்டு நாட்கள் அங்கிருப்பேன். சந்திப்போம் உறவுகளே என தெரிவித்து இருந்தார். என் நேசத்திற்குரிய கோவை மக்களைச் சந்திப்பதற்காகவும், … Read more

இன்று மாலை மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கிராம சபை தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம்..!

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கிராம சபை தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் இன்று மாலை நடைப்பெறுகிறது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  உள்ளாட்சி அமைப்புகளை வலுவாக்குவதற்காக, கிராமசபை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த மக்கள் நீதி மய்யம் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. வருகிற ஆகஸ்ட் 15ம் தேதியன்று (15-08-2021) கிராமசபைக் கூட்டத்தை நடத்த வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் மனு கொடுக்கும் நிகழ்வை 02-08-2021 அன்று நாம் … Read more

உள்ளாட்சி தேர்தலுக்கு மக்கள்நீதி மய்யம் தயாராகி வருகிறது: கமல்

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி வருகிறது என கமல்ஹாசன் கூறினார். மக்கள் நீதி மய்யம் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டிலும் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை. தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தோல்வியடைந்த நிலையில் சில முக்கிய நிர்வாகிகள் வேறு கட்சிக்கு மாறினர். இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், தமிழகத்தில் அடுத்து நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு … Read more

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக மகேந்திரன் வந்துள்ளார் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தேர்தலுக்கு முன்பு மகேந்திரன் போன்றோர் இணைந்திருந்தால் எதிர்பார்த்த வெற்றி கிடைத்திருக்கும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு. சட்டமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் துணை தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிய மகேந்திரன், 78 ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். மநீம-வில் இருந்து விலகிய பத்மப்ரியாவும் திமுகவில் இணைந்துள்ளார். இந்நிகழ்வில், நீர்வளத்துறை அமைச்சரும், தி.மு.க பொதுச் செயலாளருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, … Read more

திமுகவில் இணையவுள்ளதாக ம.நீ.மவின் முன்னாள் துணைத்தலைவர் ஆர்.மகேந்திரன் அறிவிப்பு!

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய மகேந்திரன் இன்று மாலை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார். சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியடைந்ததை தொடர்ந்து அக்கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் விலகுவதாக செய்தியாளர்களை சந்தித்து அறிவித்திருந்தார். இதனால் அக்கட்சியின் மீது பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். கட்சியின் மீதும், கமல்ஹாசன் மீதும் மகேந்திரன் சில குற்றச்சாட்டுகளை … Read more

மக்கள் நீதி மய்யத்தின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு ..!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் பொறுப்புடன் கூடுதலாக பொதுச்செயலாளர் பொறுப்பையும் கமல்ஹாசன் ஏற்கிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. இதைத்தொடர்ந்து கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் பலர் கட்சியிலிருந்து விலகினர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் நிர்வாகளுடன் கமல்ஹாசன் இன்று காலை காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, பொதுச்செயலாளர் உள்ளிட்ட உயர்மட்ட நிர்வாகிகளை கமல்ஹாசன் அறிவித்தார். அதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் … Read more

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாளை ஆலோசனை..!

நாளை மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் காலை 11 மணிக்கு காணொலி மூலம்  கமல் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.  சமீபத்தில் விரைவில் புதிய அறிவிப்புகளோடு சந்திப்பேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்த நிலையில், நாளை நிர்வாகிகளுடன் காலை 11 மணிக்கு காணொலி மூலம் கமல் ஆலோசனையில் ஈடுபடுகிறார். புதிய நிர்வாகிகள் நியமனம், உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராவது, மக்கள் நீதி மய்யம் அடுத்தக்கட்ட பயணம், கட்சி வலுப்படுத்துதல் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக … Read more

“தமிழக அரசுக்கு இதைச் செய்யும் ஆற்றல் உண்டு என நான் நம்புகிறேன்” -கமல் ..!

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும்,இதுகுறித்து கமல்ஹாசன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “பெருந்தொற்று காலம் உருவாக்கிய பொருளாதார நெருக்கடி, மருத்துவப் படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு, தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, பாடப்புத்தகம் முதல் சீருடை வரை அனைத்தும் இலவசம் உள்ளிட்ட பல காரணங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கூடுதலாக இரண்டு லட்சம் மாணவர்கள் சேரும் … Read more

“என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன்; அரசியல் இருக்கும் வரை ம.நீ.ம இருக்கும்” -கமல் ..!

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியைச் சந்தித்தது. அதிலும், கூட்டணி கட்சிகளான சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே கட்சிகளும் படுதோல்வி அடைந்தன. மநீம தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் நீண்ட இழுபறிக்கு பிறகு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியைத் தழுவினார். தேர்தல் தோல்விக்கு பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர் பொதுச்செயலர்கள் … Read more

அரச பயங்கரவாதத்தினால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களை நினைத்துக்கொள்கிறேன் – கமல்..!

ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரச பயங்கரவாதத்தினால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களை நினைத்துக்கொள்கிறேன் என கமல் பதிவிட்டுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேருக்கும் இன்று 3-ஆம் ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, பல அரசியல் தலைவர்கள் நேரிலும், சமூகவலைத்தளங்கள் மூலம் தங்களது அஞ்சலி செலுத்தும் விதமாக இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகரும், … Read more