இன்று மாலை மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கிராம சபை தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம்..!

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கிராம சபை தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் இன்று மாலை நடைப்பெறுகிறது.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  உள்ளாட்சி அமைப்புகளை வலுவாக்குவதற்காக, கிராமசபை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த மக்கள் நீதி மய்யம் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. வருகிற ஆகஸ்ட் 15ம் தேதியன்று (15-08-2021) கிராமசபைக் கூட்டத்தை நடத்த வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் மனு கொடுக்கும் நிகழ்வை 02-08-2021 அன்று நாம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

மனுவின் நகல் மாவட்ட நிர்வாகிகளுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும். இம்மனுவை 02-08-2021 (திங்கட்கிழமை) அன்று காலை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டுகிறேன்.

மேலும், 31-07-2021 (சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு கிராம சபை விழிப்புணர்வு குறித்த கலந்துரையாடல் கூட்டம் (Zoom Meeting) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் நமது கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட செயலாளர்கள் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும்.

இக்கூட்டத்தில் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகள், விளக்கங்களை [email protected] என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும் உள்ளாட்சி வல்லுனர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று உங்களின் கேள்விகளுக்கு விடையளிப்பார்கள்.

குறிப்பு:

கலந்துரையாடல் கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு கீழ்க்கண்ட “கிராம சபை” பயிற்சி வீடியோக்களைப் பார்த்துவிட்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

https://youtu.be/Q5Vy7BWxmaQ

 

author avatar
murugan