உத்தரபிரதேசம் : 37,000 ஒலிபெருக்கிகள் அகற்றம் ; 55,000 ஒலிபெருக்கிகள் ஒலி அளவு குறைப்பு…!

உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மசூதிகள் மற்றும் சில மத வழிபாட்டுத் தலங்களில் அதிக அளவில் இரைச்சலுடன் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறி கடந்த சில நாட்களாகவே சில சர்ச்சைகள் எழுந்தவண்ணம் உள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதல்வரின் அனுமதி இன்றி பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் அனைத்தும் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஒலிபெருகிகளுக்கான ஒலி அளவு குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே அதிக அளவிலான ஒலிபெருக்கிகளில் ஒலி அளவு குறைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டுவரும் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளது. தற்போது இது குறித்து … Read more

சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு வந்த 10,000 -க்கும் அதிகமான ஒலிபெருக்கிகள் அகற்றம் – உ.பி அரசு அதிரடி!

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வரின் அனுமதி இன்றி சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒலி பெருக்கிகள் மத வழிபாட்டுத் தலங்களில் இருந்து அகற்றப்படும் எனவும், ஒலி அளவு அதிகமாக வைத்து பயன்படுத்தும் ஒலிபெருக்கிகளும் அகற்றப்படும் எனவும் முன்னதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பாக இந்த அறிவிப்பு வெளியாகியதை அடுத்து பல வழிபாட்டு தலங்களில் உள்ள ஒலிபெருக்கிகள் ஒலி அளவை தாங்களாகவே குறைத்துக்கொண்டுள்ளனர். மேலும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 17 ஆயிரத்துக்கும் அதிகமான மத வழிபாட்டுத் தலங்களில் உள்ள ஒலிபெருக்கிகளில் … Read more

உ.பி முதல்வர் உத்தரவின்பேரில் 17,000 மதவழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிகள் ஒலி குறைப்பு …!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக முதல்வரின் உத்தரவின்றி பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் மற்றும் இரைச்சல் வரம்பை மீறி அதிக அளவு ஒலி எழுப்பி பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வருகிற 30ம் தேதிக்குள் இது தொடர்பான பட்டியலை தயாரித்து அனுப்புமாறு காவல் நிலையங்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த வழிபாட்டுத் தலங்களில் உள்ள மதத் தலைவர்களுடன் கலந்துரையாடி பின், சட்டவிரோதமாக உள்ள ஒலிபெருக்கிகள் அனைத்தும் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்பொழுது உத்தர பிரதேச முதல்வர் … Read more

உ.பி-யில் சட்டவிரோதமாக மதவழிபட்டு தலங்களில் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கியை அகற்ற உத்தரவு…!

உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கடந்த சில மாதங்களாகவே மத வழிபாட்டுத் தலங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒலிபெருக்கிகள் தொடர்ந்து சர்ச்சை பொருளாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், தற்பொழுது உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்ட விரோதமாக பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் அகற்றப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி சட்டவிரோதமாக முதல்வரின் உத்தரவின்றி பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் மற்றும் இரைச்சல் வரம்பை மீறி அதிக அளவு ஒலி எழுப்பி பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வருகிற 30ம் தேதிக்குள் … Read more

மத வழிபாட்டுத் தலங்களில் உரிய அனுமதியுடன் மட்டுமே ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும் – மகாராஷ்டிரா அரசு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மசூதிகளில் சத்தமாக ஒலிபெருக்கிகளை ஒலிக்கக் கூடாது எனவும், அவ்வாறு மசூதிகளில் ஒலிபெருக்கிகள் அதிக சத்தத்துடன் ஒலிக்கப்பட்டால், மசூதி வாசலில் ஹிந்து பாடல்கள் ஒலிக்கும் ஒலிபெருக்கிகள் வைக்கப்படும் என MNS தலைவர் ராஜ் தாக்கரே அவர்கள் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இனி மத வழிபாட்டு தலங்களில் உரிய அனுமதி பெற்று மட்டுமே ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும் என மகாராஷ்டிர அரசு அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் – கட்டுப்பாடுகளை விதித்த மாநில தேர்தல் ஆணையம்!

அனுமதியின்றி பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிபெருக்கிகளும் பறிமுதல் செய்யப்படும் என மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற்றிடவும், தேர்தல் நடத்தை விதிகளின்படி, தேர்தல் காலங்களில் … Read more