மகாராஷ்டிரா மசூதிகளில் ஒலிபெருக்கிகள் அகற்றுவதற்கு ராஜ் தாக்கரே கொடுத்த காலக்கெடு நிறைவு…, பலப்படுத்தப்பட்ட போலீஸ் பாதுகாப்பு..!

மகாராஷ்டிரா மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் மத வழிபாட்டுத்தலங்கள் ஒலிபெருக்கிகள் தொடர்பான சர்ச்சை கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மசூதிகளில் ஒலிபெருக்கிகள் ஒலிக்கும் பட்சத்தில் அந்த மசூதிக்கு வெளியில் ஹனுமான் பாடல் சத்தமாக ஒலிக்கப்கப்படும் என  கூறியிருந்தார். மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பதாக இது குறித்து பேசிய அவர், மசூதிகளில் மே 3ம் தேதிக்குள் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என … Read more

உத்தரபிரதேசம் : 37,000 ஒலிபெருக்கிகள் அகற்றம் ; 55,000 ஒலிபெருக்கிகள் ஒலி அளவு குறைப்பு…!

உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மசூதிகள் மற்றும் சில மத வழிபாட்டுத் தலங்களில் அதிக அளவில் இரைச்சலுடன் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறி கடந்த சில நாட்களாகவே சில சர்ச்சைகள் எழுந்தவண்ணம் உள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதல்வரின் அனுமதி இன்றி பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் அனைத்தும் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஒலிபெருகிகளுக்கான ஒலி அளவு குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே அதிக அளவிலான ஒலிபெருக்கிகளில் ஒலி அளவு குறைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டுவரும் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளது. தற்போது இது குறித்து … Read more

சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு வந்த 10,000 -க்கும் அதிகமான ஒலிபெருக்கிகள் அகற்றம் – உ.பி அரசு அதிரடி!

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வரின் அனுமதி இன்றி சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒலி பெருக்கிகள் மத வழிபாட்டுத் தலங்களில் இருந்து அகற்றப்படும் எனவும், ஒலி அளவு அதிகமாக வைத்து பயன்படுத்தும் ஒலிபெருக்கிகளும் அகற்றப்படும் எனவும் முன்னதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பாக இந்த அறிவிப்பு வெளியாகியதை அடுத்து பல வழிபாட்டு தலங்களில் உள்ள ஒலிபெருக்கிகள் ஒலி அளவை தாங்களாகவே குறைத்துக்கொண்டுள்ளனர். மேலும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 17 ஆயிரத்துக்கும் அதிகமான மத வழிபாட்டுத் தலங்களில் உள்ள ஒலிபெருக்கிகளில் … Read more

உ.பி முதல்வர் உத்தரவின்பேரில் 17,000 மதவழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிகள் ஒலி குறைப்பு …!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக முதல்வரின் உத்தரவின்றி பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் மற்றும் இரைச்சல் வரம்பை மீறி அதிக அளவு ஒலி எழுப்பி பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வருகிற 30ம் தேதிக்குள் இது தொடர்பான பட்டியலை தயாரித்து அனுப்புமாறு காவல் நிலையங்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த வழிபாட்டுத் தலங்களில் உள்ள மதத் தலைவர்களுடன் கலந்துரையாடி பின், சட்டவிரோதமாக உள்ள ஒலிபெருக்கிகள் அனைத்தும் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்பொழுது உத்தர பிரதேச முதல்வர் … Read more