மியான்மர் ராணுவ ஆட்சிக்கு பின் இதுவரை 740 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்!

மியான்மரில் ராணுவ ஆட்சி மாற்றப்பட்டதில் இருந்து இதுவரை 740 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியை கவிழ்த்து மியான்மர் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கடந்த பிப்ரவரியில் கைப்பற்றியது. இந்நிலையில் ஆங் சான் சூகி அவர்களுடன் சேர்த்து முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அன்றைய தினம் நள்ளிரவிலேயே … Read more

தரையிறங்கும் போது வீட்டு கூரை மீது விழுந்த ஜிம்பாப்வே ஹெலிகாப்டர் – குழந்தை உட்பட 4 பேர் பலி!

ஜிம்பாப்வேயில் விமானப்படை ஹெலிகாப்டர் பயிற்சி நேரத்தில் வயல்வெளியில் தரையிறங்கும் போது வீட்டின் மீது விழுந்ததில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்காவிலுள்ள ஜிம்பாப்வே எனுமிடத்தில் விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று இரண்டு விமானிகள் மற்றும் ஒரு தொழில் நுட்ப வல்லுனருடன் பயிற்சி பணியில் இருந்துள்ளது. வயல்வெளியில் தரை இறங்கும் பொழுது திடீரென விமானம் நிலை தடுமாறி ஒரு வீட்டின் மீது விழுந்துள்ளது. இதில் மூன்று ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். விமானப்படை அறிக்கையில் இது … Read more

மத்திய பிரதேசத்தில் ஒரே நேரத்தில் 3 பேர் கொலை – முன்னாள் துணை முதல்வர் வீட்டில் சோகம்!

மத்திய பிரதேசத்தின் முன்னாள் துணை முதல்வர் பியர்லால் கன்வார் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 3 பேர் ஒரே நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபரால் கொலை செய்யப்பட்டுள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கோர்பா எனும் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் முன்னாள் துணை முதல்வர் வீட்டில் 3 பேர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். கோர்பா மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய முன்னாள் துணை முதல்வர் பியாரிலால் கன்வார் அவர்களின் மகன், மருமகள் மற்றும் 5வயது பேத்தி … Read more

டெல்லியில் தூசிப் புயலில் பறந்து வந்த தகரம் வெட்டியதில் பெண் உயிரிழப்பு!

டெல்லியில் ஏற்பட்டுள்ள தூசி புயலின் காரணமாக நடந்து வந்து கொண்டிருந்த பெண் மீது தகரம் வந்து விழுந்ததில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். டெல்லியில் தற்போது பல்வேறு இடங்களிலும் மிக அதிகமான தூசிப் புயல் வீசி வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை தனது மகளுடன் 37 வயதுடைய சோனு கட்டாரியா எனும் பெண்மணி சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது ஒரு கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து காற்றின் வேகத்தில் பறந்து வந்த தகரம் நடந்து … Read more

ஹைதி சிறைச்சாலை கலவரத்தால் தப்பி ஓடிய 400 கைதிகள்; 25 பேர் உயிரிழப்பு!

ஹைதி நாட்டில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 400 கைதிகள் தப்பி ஓடிய நிலையில், சிறை அதிகாரிகள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். தீவு நாடுகளில் ஒன்றான ஹைதியின் தலைநகர் போர்ட்-அவ்-பிரின்சின் எனும் பகுதியில் உள்ள சிவில் சிறைச்சாலை ஒன்றில் கொலை, கொள்ளை உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நூற்றுக்கணக்கான குற்றவாளிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சிறைச்சாலையில் திடீரென ஏற்பட்ட கலவரத்தால் கைதிகளுக்கும் சிறை காவலர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. சிறைக்காவலர்கள் கலவரத்தை கட்டுப்படுத்த … Read more

ஒரே நேரத்தில் மூன்று வாகனங்கள் மீது மோதிய டிரக் – 5 பேர் பலி, 5 பேர் படுகாயம்!

மகாராஷ்டிரத்தின் மும்பை – புனே அதிவேக நெடுஞ்சாலையில் வேகமாக வந்த டிரக் முன்னே சென்ற இரு கார்கள் மற்றும் லாரி மீது மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட மொத்தம் ஐந்து பேர் பலியாகி உள்ளனர். மகாராஷ்டிராவில் உள்ள மும்பை – புனே அதிவேக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு கார்கள் மற்றும் ஒரு லாரி மீது பின்னால் வந்த டிரக் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருந்த ஒரு காரில் … Read more

மூடநம்பிக்கையால் இரு மகள்களை கொன்ற பெற்றோர்கள்..!

ஆந்திராவில் பெற்றோர்கள் மூடநம்பிக்கை மற்றும் அதிக பக்தி காரணமாக இரண்டு மகள்களை கொடூரமாக கொலை செய்தனர். இந்த சம்பவம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் நேற்று இரவு தேசிய பெண் குழந்தை தினத்தில் நடந்தது. மத்தனப்பள்ளி நகரில் உள்ள ஆசிரியர் காலனி சிவநகரில் புருஷோத்தம் நாயுடு மற்றும் பத்மாஜா ஆகியோருடன் இவர்களின் 2 மகளும் வசித்து வந்தனர். புருஷோத்தம் நாயுடு மகளிர் பட்டம் கல்லூரியில் துணை முதல்வராகவும், பத்மஜா மாஸ்டர் மைண்ட் பள்ளியின் முதல்வராகவும் உள்ளனர். இவர்களுக்கு அலெக்கியா … Read more

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் தாக்குதலில் 28 தலிபான் தீவிரவாதிகள் கொலை!

ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 19 ஆண்டுகளாக தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசு படைக்கும் இடையே மிக பயங்கரமான உள்நாட்டுப்போர் அடிக்கடி ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இந்த உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது. கடினமான ஒன்றாக இருந்தாலும் அமெரிக்காவின் முயற்சியால் தற்பொழுது அதன் பயனாக தலிபான்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசு இடையே கத்தார் நாட்டில் வைத்து அமைதி முறையில் … Read more

வடகிழக்கு நைஜீரியா படுகொலை – 110 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐநா தகவல்!

கடந்த வாரம் நைஜீரியாவில் கடத்தப்பட்ட போகோ ஹராம் குழு தாக்குதலில் 110-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதாக அந்நாட்டின் ஐநா மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தின் மீது போகோ ஹராம் ஜிகாதி குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நெல் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த கோர்ஷா எனும் கிராமத்தில் உள்ள விவசாயிகள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 110 அப்பாவி … Read more

மகனுடன் தொடர்பில் இருந்த தாய்…. பிறருடனும் கள்ள தொடர்பு இருந்ததால் கொலை செய்த மகன்!

தகப்பன் இறந்த பின்பு தாயுடன் உடலுறவில் இருந்த மகன், பிறருடனும் தாய் கள்ள தொடர்பில் இருந்ததால் கொலை செய்துவிட்டு சரணடைந்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள வனாஹள்ளி எனும் பகுதியை சேர்ந்த சிவப்பா என்பவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். 21 வயதாகும் இவரது தந்தை கடந்த வருடம் உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார். இந்நிலையில் தாயுடன் வசித்து வந்த சிவப்பா கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இவரது தாய் தந்தை இறந்த பின்பு மற்ற ஆண்களுடன் தொடர்பு வைத்துக் … Read more