ஹைதி நிலநடுக்கம் : உயிரிழப்பு 1,419 ஆக உயர்வு!

ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இதுவரை 1,419 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வட அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கம் தலைநகர் போர்ட்-ஆப்-பிரின்சில் இருந்து 125 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹைதியில் உள்ள பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியது. உடனடியாக அப்பகுதியில் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு … Read more

ரூம் மேட்டை கொன்று விட்டு, உடலை வெளியில் தூக்கி எறிந்த வாலிபர் கைது…!

ரூம் மேட்டை கொன்று விட்டு, உடலை வெளியில் தூக்கி எறிந்த 26 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள தபா என்னும் பகுதியில் 35 வயதுடைய ராஜு நந்தீஸ்வரர், 26 வயதுடைய தேவன்ஷ் வாகோட் என்பவருடன் ஒரே அறையில் தங்கி வந்துள்ளார். இவர்கள் இருவரும் கார் மெக்கானிக்காக ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தேவன்ஷ் வாகோட், … Read more

ஆப்கானிஸ்தான்: ஒரே நாளில் நடத்தப்பட்ட ராணுவ தாக்குதலில் 254 தலிபான்கள் பலி!

ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 254 தலிபான்கள் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் ராணுவம் தாலிபான்களை அடக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் ராணுவம் நேற்று ஒருநாள் நடத்திய தாக்குதலில் தலிபான் அமைப்பை சேர்ந்த 254 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 97 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து தெரிவித்துள்ள அந்நாட்டு பாதுகாப்பு துறை … Read more

ஆப்கானிஸ்தானில் வான்வழி தாக்குதல் – 30 தலிபான் தீவிரவாதிகள் பலி!

ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 30 தலிபான்கள் உயிரிழந்துள்ள நிலையில், 17 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  ஆப்கானிஸ்தானில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில், தற்பொழுதும் ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சுற்றிவளைத்த ஆப்கானிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்த தொடங்கி உள்ளது. இதில் 30 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ள நிலையில், 17 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் ஜின்ஹுவா அவர்கள் தெரிவித்துள்ளார். … Read more

ஈராக் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து – 50 பேர் உயிரிழப்பு!

ஈராக் நாசிரியா நகரில் உள்ள கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 50 பேர் உயிரிழந்துள்ளனர். ஈராக்கின் தெற்கு நகரமான நாசிரியாவில் உள்ள கொரோனா சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என … Read more

வங்கதேசத்தில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – 52 பேர் உயிரிழப்பு!

வங்க தேசத்தில் உள்ள ஜூஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் 52 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 பேர் காயமடைந்து உள்ளனர். வங்கதேசத்தின் தலைநகராகிய டாக்காவில் உள்ள 6 மாடி கட்டிடம் கொண்ட ஜூஸ் தொழிற்சாலை ஓன்றில் நேற்று மாலை 5 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தில் அதிகளவிலான இரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் வைக்கப்பட்டிருந்ததால் அந்த தீ வேகமாக அருகிலிருந்த கட்டிடங்களுக்கு பரவியுள்ளது. உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 18 வாகனங்களில் தீயணைப்பு … Read more

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் 5பயங்கரவாதிகள் கொலை!

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 5 தீவிரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீரில் உள்ள குல்காம் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் பதுங்கிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. எனவே அவ்விடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. குல்காம் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த மோதலின்போது முதலில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதற்கு பதில் தாக்குதல் நடத்திய பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் … Read more

பள்ளத்தில் வேன் விழுந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்!

இமாசலப் பிரதேசத்திலுள்ள சிரமௌர் எனும் பகுதியில் உள்ள பள்ளத்தில் வேன் விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 பேர் காயமடைந்துள்ளனர். இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிரமௌர் மாவட்டத்திலுள்ள பச்சாத் எனும் பகுதியில் பேக் பாஷாக் கிராமத்தின் அருகே உள்ள பள்ளத்தில் நேற்று மாலை கார் தடுமாறி விழுந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆனால், உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்படாமல் உள்ளதாகவும் … Read more

மியான்மர் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரே நாளில் 20 பேர் உயிரிழப்பு!

மியான்மரில் கடந்த பிப்ரவரி முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய ஹஸ்வீ கிராம மக்கள் 20 பேர் நேற்று சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியை கவிழ்த்து மியான்மர் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கடந்த பிப்ரவரியில் கைப்பற்றியது. இந்நிலையில் ஆங் சான் சூகி அவர்களுடன் சேர்த்து முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட … Read more

ஆப்கானிஸ்தான் ராணுவ தாக்குதலில் தலிபான் தளபதி உட்பட 18 பேர் கொலை!

ஆப்கானிஸ்தானில் உள்ள அக்சா மாவட்டத்தில் அந்நாட்டின் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் தலிபான் தீவிரவாதிகளின் தளபதி உட்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் அமைப்பினருக்கும் ராணுவத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருவது வழக்கம். இருப்பினும் கடந்த ஒரு வார காலமாக அங்கு தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கு மோதல் வலுத்துள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் வடக்கு ஜவ்ஜ்ஜான் மாகாணத்தின் அக்சா மாவட்டத்தில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக அந்நாட்டின் ராணுவத்தினருக்கு ரகசியமாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தீவிரவாதிகளை தேடும் … Read more