பீகார் : கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயிரிழப்பு …!

பீகார் மாநிலத்தை சேர்ந்த 5 பேர் கள்ளச்சாராயம் காய்ச்சி குடித்து உயிர் இழந்துள்ளனர். பீகாரில் கடந்த 5 ஆண்டுகளாக பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பீகார் மாநிலத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி குடிக்க கூடிய கும்பல் அதிகரித்துள்ளதுடன், இதனால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், தற்போது பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள ருபாலி எனும் கிராமத்தை சேர்ந்த சிலர் நேற்று கள்ளச்சாராயம் காய்ச்சி குடித்துள்ளனர். அப்பொழுது அக்கிராமத்தை சேர்ந்த பல மது … Read more

2021 ல் காஷ்மீரில் 28 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்- காஷ்மீர் காவல்துறை..!

2021 ஆம் ஆண்டில் காஷ்மீரில் 28 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது. காஷ்மீரின் ஐஜி விஜயகுமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில், காஷ்மீரில் 2021 ஆம் ஆண்டில் மொத்தம் 28 பொதுமக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். 28 பேரில், ஐந்து பேர் உள்ளூர் இந்து/சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 2 பேர் உள்ளூர் அல்லாத இந்து தொழிலாளர்கள் என தெரிவித்தார். ஏராளமான பயங்கரவாத மறைவிடங்கள் அழிக்கப்பட்டதாலும் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டதாலும், எல்லை தாண்டி பயங்கரவாதிகள் அப்பாவி … Read more

மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்து விழுந்த பேருந்து – 7 பேர் பலி, 28 பேர் காயம்!

பாகிஸ்தானில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து கீழே விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 28 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் கராச்சி பகுதியில் இருந்து சாக்வால் மாவட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்தின் டயர் திடீரென வெடித்துள்ளது. இதனால் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தின் போது பேருந்தில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த விபத்தில் 7 … Read more

கனமழை : வீட்டு சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி…!

ஈரோட்டில் தொடர் கனமழை காரணமாக வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  ஈரோடு மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி பகுதிக்குட்பட்ட மரப்பாலம் வீதியில் அங்கம்மாள் என்னும் மூதாட்டி தனது மகன் ராமசாமியுடன் வசித்து வருகிறார். நேற்று மாலை முதல் பெய்த தொடர் கனமழை காரணமாக மூதாட்டி வசித்து வந்த ஓட்டு வீடு பலவீனமடைந்துள்ளது. இந்நிலையில், தூங்கிக்கொண்டிருந்த அங்கம்மாள் மற்றும் ராமசாமி மீது விழுந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திலேயே மூதாட்டி … Read more

தேர்வெழுத வந்திருந்த காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்த காதலன்…!

கேரளாவில் தேர்வு எழுதுவதற்காக வந்திருந்த காதலியின் கழுத்தை அறுத்து காதலன் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலுள்ள கோட்டையம் எனும் மாவட்டத்தை சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண் நிதினா சென்ட் தாமஸ் கல்லூரியில் படித்து வருகிறார். இன்று தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு சென்ற நிதினா தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்துள்ளார். அப்பொழுது வள்ளிச்சீரா பகுதியை சேர்ந்த அபிஷேக் என்பவரும் அதே தேர்வு மையத்தில் தேர்வு எழுதி முடித்து விட்டு வெளியே வந்து … Read more

மின்சாரம் தாக்கி தந்தை மற்றும் இரு மகன்கள் பலி …!

திண்டுக்கல் அருகே மின்சாரம் தாக்கியதில் தந்தை மற்றும் அவரை காப்பாற்ற சென்ற இரு மகன்கள் மூவரும் உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் அடுத்த செட்டியபட்டி எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய 45 வயதுடையவர் தான் திருப்பதி. இவர் மின்கசிவு இருப்பது தெரியாமல் சுவர் ஒன்றை தொட்டுள்ளார். இதனையடுத்து, அவரை மின்சாரம் தாக்கி உள்ளது. திருப்பதியை மின்சாரம் தாக்கியது அறிந்த அவரது மகன்கள் தங்களது தந்தையை காப்பாற்றுவதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில், தந்தையை காப்பாற்ற சென்ற 15 வயதுடைய சந்தோஷ்குமார் மற்றும் 17 … Read more

நைஜீரியாவில் துப்பாக்கிச்சூடு – 34 பேர் உயிரிழப்பு…!

நைஜீரியாவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், கிராம மக்கள் 34 பேர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியாவின் வட மேற்கு பகுதியில் உள்ள கடுனா பகுதி கவுரா நகரில் உள்ள மடமய் எனும் கிராமத்தில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் சிலர் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 34 பேர் உயிரிழந்த நிலையில், 7 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலின் பொழுது இந்த மர்ம நபர்கள் சில வீடுகளுக்கும் தீ வைத்துள்ளனர். இது குறித்து அரசு படையினருக்கு … Read more

மனைவியுடன் கருத்து வேறுபாடு – 2 குழந்தைகளையும் கொன்றுவிட்டு, தற்கொலை செய்து கொண்ட கணவர்!

தனது மனைவியுடனான கருத்து வேறுபாடு காரணமாக சேலத்தை சேர்ந்த நபர் ஒருவர், தனது 2 குழந்தைகளை கொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள ஒரு ஹோட்டலில் பணியாற்றி வரக்கூடிய நபர் தான் முருகன். முருகனுக்கும் அவரது மனைவி முருகேஸ்வரிக்கும் கடந்த சில தினங்களாக கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் 9 வயதில் மகனும், 5 வயதில் மகளும் உள்ளனர். தனது மனைவியுடன் … Read more

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு – 3 பேர் பலி; 21 பேர் காயம்!

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த அடுத்தடுத்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 21 பேர் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் மற்றும் அந்நாட்டிலிருந்த பிற நாட்டு மக்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி உள்ளனர். இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் உள்ள பி.டி.13 பகுதியில் சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்று நேற்று வெடித்தது. இந்த சம்பவத்தில் 2 பேர் … Read more

பால்கனி இடிந்து விழுந்து விபத்து – 8 மாத குழந்தை பலி: 2 பேர் காயம்!

காசியாபாத் பகுதியில் வீட்டின் பால்கனி இடிந்து விழுந்த விபத்தில் 8 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.  உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள காசியாபாத்  கோடா மகாலட்சுமி காலனியில் வசித்து வரக்கூடிய பெண் ஒருவர் தனது சகோதரர் வீட்டிற்கு ரக்ஷாபந்தன் கொண்டாடுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் மழை பெய்ததால் அந்த பெண் தனது 8 மாத குழந்தை மற்றும் அவரது தாயாருடன் பால்கனியின் கீழ் நின்றுகொண்டிருந்துள்ளார். அப்பொழுது இந்த பால்கனி திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் … Read more