ஹைதி சிறைச்சாலை கலவரத்தால் தப்பி ஓடிய 400 கைதிகள்; 25 பேர் உயிரிழப்பு!

ஹைதி நாட்டில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 400 கைதிகள் தப்பி ஓடிய நிலையில், சிறை அதிகாரிகள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

தீவு நாடுகளில் ஒன்றான ஹைதியின் தலைநகர் போர்ட்-அவ்-பிரின்சின் எனும் பகுதியில் உள்ள சிவில் சிறைச்சாலை ஒன்றில் கொலை, கொள்ளை உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நூற்றுக்கணக்கான குற்றவாளிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சிறைச்சாலையில் திடீரென ஏற்பட்ட கலவரத்தால் கைதிகளுக்கும் சிறை காவலர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

சிறைக்காவலர்கள் கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்தாலும், கை மீறிய கலவரத்தால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 400க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி சென்றுள்ளனர். மேலும் இந்த கலவரத்தில் சிறைத்துறை அதிகாரிகள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹைதி சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறையிலிருந்து தப்பி சென்ற கைதிகளை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

author avatar
Rebekal