#Big Breaking : கேரளாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்து

துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் பொழுது ஓடுபாதையில்  நிற்காமல் சென்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது . இந்த விபத்தில் விமானம் இரண்டாக உடைந்தது. விமானத்தில் விமானிகள் , விமான பணிப்பெண்கள்  ,பயணிகள்  உட்பட 191 பேர் பயணம் செய்தனர்.தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . இதன் முழு விவரம் தொடர்ச்சியாக பதிவிடப்படும் ..

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 962 பேருக்கு கொரோனா.!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 962 பேருக்கு கொரோனா . கேரளாவில் இன்று ஒரே நாளில் 962 பேருக்கு கொரோனா பாதிப்பு. கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 815 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 15,282பேர் குணமடைந்தனர்.  தற்போது 11,484 பேர் சிகிச்சையில் உள்ளனர். கேரளாவில் இன்று 2 பேர் கொரோனவால் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்புகள் 84ஆக உயர்ந்துள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கேரளா தங்கக்கடத்தல் வழக்கு.. ஸ்வப்னா சுரேஷூக்கு ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்!

தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷூக்கு ஆகஸ்ட் 21-ம் தேதி வரை சிறையில் அடைக்க கொச்சி என்.ஐ.ஏ நீதிமன்றம் உதீர்ப்பளித்தது. கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் 15 கோடி ருபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷூக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயரை கைது செய்து, கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, அவர்களை நீதிமன்ற … Read more

கொரோனாவிற்கு குட் பை சொல்லிய 105 வயது மூதாட்டி!

கேரளாவில் கொரோனாவை வென்ற 105 வயது மூதாட்டி. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாலுக்குனால் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது.  இந்நிலையில், கேரளாவில், அஸ்மா பீவி என்ற 105 வயது மூதாட்டி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், கொல்லம் பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் … Read more

பாதை தகராறில் ஆண், பெண்களுக்கிடையே மோதல் – 4 பேர் காயம்!

பஞ்சாயத்து நிர்வாகத்தால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட பாதை தகராறில் இருதரப்பினர் மோதி சண்டையிட்டு 4 பேர் காயமடைந்துள்ளனர். கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள ஆராட்டுப்புழா பகுதியில் பஞ்சாயத்து நிர்வாகத்தால் தயார் செய்யப்பட்ட பாதையை ஒரு தரப்பினர் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால், அதனை மற்றொரு தரப்பினர் அடைப்பதற்கும் முயற்சித்ததால் இந்த இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆண் பெண் என்று பாராமல் இருவரும் சரமாரியாக ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். … Read more

சிவசங்கரனிடம் சுங்கத்துறையை தொடர்ந்து.. என்.ஐ.ஏ அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரணை.!

கடந்த மாதம், திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளியான சுவப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இவர்களுடன் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளராக இருந்த அவர், போலி சான்றிதழ் மூலம் கேரள அரசு ஐ.டி துறையில் சுவப்னா சுரேஷுக்கு உயர் பதவி கிடைக்க … Read more

கேரள தங்கக்கடத்தல் வழக்கு.. முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரிடம் என்ஐஏ விசாரணை!

கேரளா தங்கக்கடத்தல் வழக்கில் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரனுக்கு தொடர்பு இருந்த நிலையில், அவரிடம் என்ஐஏ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் 15 கோடி ருபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவான ஸ்வப்னா மற்றும் அவரின் கூட்டாளிகளான சரித், சந்தீப் நாயர் ஆகியோரை கைது செய்து, என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, அவர்களை … Read more

கேரள தங்கம் கடத்தல் வழக்கு ! 180 கிலோ தங்கம் கடத்தல் -விசாரணையில் தகவல்

கேரள தங்கம் கடத்தல் வழக்கில்   180 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளதாக  விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநில திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்திய சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தூதரக முன்னாள் ஊழியர்களான சரித், ஸ்வப்னா சுரேஷ், அவருடைய உறவினர் சந்தீப் நாயர் ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ் உள்பட 3 பேரையும் … Read more

“தங்கம் வந்தது பச்சை மற்றும் காவி நிறத்தில்.. சிவப்பு நிறத்தில் அல்ல”- கொடியேறி பாலகிருஷ்ணன்!

கடத்தப்பட்ட தங்கம் வந்தது பச்சை மற்றும் காவி நிறத்தில், சிவப்பு நிறத்தில் அல்ல என அம்மாநில கம்யூனிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் தெரிவித்தார். கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு வந்த பார்சலை ஆய்வு செய்தனர். அதில் சுமார் ரூ. 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தங்க கடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவான … Read more

கேரளாவில் கொரோனாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,659 ஆக உயர்வு.!

கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக 593 பேருக்கு கொரோனா உறுதி. கேரளாவில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 593 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 11,659ஆக உயர்ந்துள்ளது. மறுத்தவமனையில் 6,416 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர். திருவனந்தபுரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 173 பேருக்கு கொரோனா பதிவாகியுள்ளன என கேரளா முதலவர் பினராயி விஜயன் தெரிவித்தார். மேலும் கொரோனா தொற்று 60 சதவீதம் உள்ளூர் பரவுதலால் … Read more