கேரள தங்கக்கடத்தல் வழக்கு.. முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரிடம் என்ஐஏ விசாரணை!

கேரள தங்கக்கடத்தல் வழக்கு.. முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரிடம் என்ஐஏ விசாரணை!

கேரளா தங்கக்கடத்தல் வழக்கில் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரனுக்கு தொடர்பு இருந்த நிலையில், அவரிடம் என்ஐஏ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் 15 கோடி ருபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, தலைமறைவான ஸ்வப்னா மற்றும் அவரின் கூட்டாளிகளான சரித், சந்தீப் நாயர் ஆகியோரை கைது செய்து, என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, அவர்களை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.

இந்த வழக்கில் கேரள அரசின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரனுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், அவரை அனைத்து பொறுப்புகளில் இருந்து பணியிடை நீக்கம் செய்து கேரள முதல்வர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் சிவசங்கரனுக்கு தொடர்பு இருந்த நிலையில், அவரிடம் என்ஐஏ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Join our channel google news Youtube