கோடையில் குறைந்த செலவில் சுற்றுலா போகலாம் வாங்க

கோடைகாலம் வந்து விட்டாலே நம் மனது மற்றும் உடல் பல துன்பங்களை சந்திக்க நேரிடும்.கோடையை சமாளிக்க ஒரே வழி குடும்பத்தார் அனைவருடனும் சுற்றுலா செல்வது. இந்த சுற்றுலாவில்  நமது ஒரே நோக்கம் அதிக இடங்களுக்கு சென்று அதிக நேரம் செலவிட வேண்டும் என்பது தான் அந்த  வகையில் நாம் பார்ப்பதற்கு சிறந்த சுற்றுலா தளங்கள் குமரி மாவட்டத்திலும் ஏராளமானவைகள்  காணப்படுகிறது. கன்னியாகுமரி ஒரே மாவட்டத்தில் குறைந்த செலவிலும் அதிக இடங்களை பார்க்கலாம்.இது பற்றி ஒரு தொகுப்பு. பகவதி … Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் ..டிச., 22., 24..,உள்ளூர் விடுமுறை..!அறிவித்தார் ஆட்சியர்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளையும் டிச..,24 தேதியும் விடுமுறை அளித்து ஆட்சியர் அறிவித்துள்ளார். கன்னியகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுசீந்திரம் ஸ்தாணுமாலையன் கோவில் மார்கழி திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு நாளையும் மற்றும் கிறிஸ்துமஸ் ஈவ் விழாவிற்காக திங்கட்கிழமையும் உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

3 மாவட்டங்களில் மிரட்டிய மழை……..மகிழ்ச்சியில் குதுகளித்த மக்கள்…!!!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியுள்ளது.இதனால் மக்கள் மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் குமரி, நாகை, தர்மபுரி மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ள நிலையில், சேலத்தில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.இந்நிலையில் சேலத்தில் வெயில் வாட்டிய நிலையில்  இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு ஆளாகினர். மேலும் தர்மபுரிமாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் நேற்றுமாலை கனமழை பெய்தது. சுமரர் ஒருமணி நேரம் … Read more

உண்டாகிறது புயல்”2 மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்”தாழ்வான பகுதி மக்கள் முகாம்க்கு வாருங்கள்..அமைச்சர் வேண்டுகோள்…!!!

2 மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கன்னியாகுமரி, ராமநாதபுரத்தில் இன்றிரவு 10 மணி வரை கடல் சீற்றமாக காணப்படும் மேலும் கடல் சீற்றமாக இருக்கும் நேரத்தில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு செல்ல வேண்டும் என தெரிவித்தார். மேலும் வடகிழக்கு பருவமழை எவ்வளவு அதிகமாக வந்தாலும், எந்த நேரத்தில் வந்தாலும் எதிர்கொள்ள தயார் நிலையில் … Read more

வாஜ்பாயின் அஸ்தியை கன்னியாகுமரியில் கரைத்தார்..!பொன்.ராதாகிருஷ்ணன்..!

கன்னியாகுமரி கடலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தியை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கரைத்தார். கடந்த சில தினங்களுக்கு முன் முன்னாள் பிரதமர் வாய்பாயின் அஸ்தி எல்லா மாநிலங்களின் பாஜக தலைவர்களுக்கு பாஜக தலைமை அலுவலகத்தில் டெல்லியில் கொடுக்கப்பட்டது இதனை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் பெற்றுக்கொண்டார்.அதன்படி தமிழக பாஜக அலுவலகமான சென்னை கமலாயத்தில் அஸ்தி வைக்கப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்திய நிலையில் இன்று 6 இடங்களில் கரைக்கப்படும் என பாஜக தலைவர் தமிழிசை … Read more

மூடப்பட்ட அம்மா குடிநீர் நிலையம்..

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம் உள்பட சில முக்கிய பஸ் நிலையங்களில் அம்மா குடிநீர் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மார்த்தாண்டத்தை பொறுத்தவரையில் அம்மா குடிநீர் விற்பனை நிலையம் காந்தி மைதானத்தில் செயல்பட்டு வந்தது.பொதுமக்களும் ஆர்வமுடன் குடிநீர் பாட்டிலை வாங்கி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஒன்றரை மாதங்களாக இங்கு அம்மா குடிநீர் விற்பனை நிலையம் பூட்டியே கிடந்தது. கடும் கோடை வெயில் கொளுத்திய நேரங்களிலும் இந்த விற்பனை நிலையம் திறக்கப்படவில்லை இது தொடர்பாக நாளிதழ்களில் படத்துடன் செய்தி … Read more

தூத்துக்குடி பாதுகாப்பு எதிரொலி !! குமரியில் வழக்கு விசாரணைகள் தொய்வு…

தூத்துக்குடியில் கடந்த 22ம்தேதி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர்.  இந்த சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடியில் பதற்றமான நிலை நிலவியது. நெல்லை, குமரி, மதுரை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். இன்னும் தூத்துக்குடியில் போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை. துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் 3 வித வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளும் … Read more

காலி குடங்களுடன் இரணியல் அருகே பெண்கள் போராட்டம்..

இரணியல் அருகே கட்டிமாங்கோடு ஊராட்சிக்குட்பட்ட மூலச்சன் விளையில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதிக்கு சரியாக தண்ணீர் வர வில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக குழாய்கள் ஆங்காங்கே உடைந்து, குடிநீர் வராததால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் முறையாக குடிநீர் வரவில்லை. கடந்த 5 மாதங்களாக இந்த நிலை தான் நீடித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை மூலச்சன்விளையை சேர்ந்த ஏராளமான பெண்கள், காலி குடங்களுடன் அந்த பகுதியில் திரண்டு … Read more

கைகுழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த 6 பெண்கள் சிக்கினர்…

குமரி மாவட்டத்தில் வடசேரி பேருந்துநிலையம் பகுதியில் கைகுழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதாக கலெக்டருக்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கும் புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி குமுதா தலைமையில் ஆள்கடத்தல் தடுப்புபிரிவு சப்இன்ஸ்பெக்டர் மெர்சி மற்றும் ஊழியர்கள், வடசேரி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் அனில்குமார் ஆகியோர் வடசேரி பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 6 பெண்கள் குழந்தைகளுடன் பிச்சை எடுப்பது தெரியவந்தது. பிடிப்பட்ட 6 பெண்களையும் அதிகாரிகள், இனி இதுபோன்று குழந்தைகள் வைத்து பிச்சை … Read more

நீட் தேர்வில் கன்னியாகுமரி மாவட்ட பள்ளி அபாரம்!!

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு மாணவ ,மாணவியர்களால் எழுதப்பட்டு அதற்கான முடிவுகள் சமிபத்தில் வெளியானது. இதில் வெள்ளிச்சந்தை அருகேயுள்ள அருணாச்சலா பள்ளியில் படித்த மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளியை சேர்ந்த சிவதேவ், ஏஞ்ஜெலின் ஜெனிட்டா, கார்த்திகா, மதன், அட்சை பகவத், நித்ய பாரதி, சிர்பின் லால் ஆகியோர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.தேர்வு எழுதியவர்களில் 58 சதவீதம் பேர் வெற்றி பெற்றுள்ளனர்.