சிஆர்பிஎஃப் முகாம் மீது புர்கா அணிந்த பயங்கரவாதி வெடிகுண்டு வீச்சு!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் உள்ள சிஆர்பிஎஃப் முகாம் மீது புர்கா அணிந்த பயங்கரவாதி வெடிகுண்டு வீச்சு. ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டம் சோபோர் நகரில் உள்ள சிஆர்பிஎஃப் முகாம் மீது நேற்று மாலை புர்கா அணிந்த பயங்கரவாதி ஒருவர் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இஸ்லாமிய உடை அணிந்திருந்த அடையாளம் தெரியாத பயங்கரவாதி, நடுத்தெருவில் நின்று, தன் பையில் இருந்த வெடிகுண்டை எடுத்து, சிஆர்பிஎஃப் … Read more

ஜம்மு காஷ்மீர் : 2 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றது பாதுகாப்பு படை!

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிசூடு சம்பவத்தில் 2 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாக பாதுகாப்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் ராணிபோரா பகுதியில் உள்ள குவாரிகத்தில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்திய பாதுகாப்பு படை பதிலடி கொடுத்தன. இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட … Read more

பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – இந்திய ராணுவ வீரர் உயிரிழப்பு.!

ஜம்மு – காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் உயிரிழந்துள்ளார். ஜம்மு – காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இன்று பிற்பகல் மீண்டும் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். பதிலுக்கு இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் காயமடைந்த இந்திய ராணுவ வீரர் … Read more

ஜம்முவில் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட ராணுவ வீரர்.!

ஜம்மு-காஷ்மீரில் சந்திரா பட்டீல் என்ற ராணுவ வீரர் தனது துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜம்மு-காஷ்மீரின் ஷோபியன் மாவட்டம் சவூரா பகுதியை சேர்ந்தவர் சந்திரா பட்டீல் .ராணுவ வீரராக பணிபுரியும் இவர் வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். ராணுவ வீரரான சந்திரா பட்டீல் தனது துப்பாக்கி மூலம் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இச்சம்பவம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு தற்கொலைக்கான காரணத்தை போலீசார் … Read more

எல்லையில் இந்திய ராணுவத்தால் சுட்டுவீழ்த்தப்பட்ட பாக்…ட்ரோன்..!

ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை 8 மணியளவில் இந்திய எல்லையைத் போர் நிறுத்தத்தை மீண்டும் மீறிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உதவ ட்ரோனைப் பயன்படுத்தி ஊடுருவி முயற்சி செய்தபோது, இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவ ட்ரோனை சுட்டு வீழ்த்தினார். 2020-ல் 3,800 முறை அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் -இந்தியா குற்றச்சாட்டு.!  இந்த ட்ரோன் சீன நிறுவனமான டி.ஜே.ஐ மேவிக் 2 புரோ மாடல் தயாரித்த பாகிஸ்தான் ட்ரோன் என்று கூறப்படுகிறது.          

ஜம்மு-காஷ்மீரில் குடும்பத்தினரை சந்தித்த பின் 2 பயங்கரவாதிகள் சரண்.!

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறைக்கு தகவல்கள் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, அந்த பகுதியில் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர். அப்போது, பயங்கரவாதிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால், பயங்கரவாதிகளின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் அவர்களை சரணடையும்படி வற்புறுத்துவதற்காக ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் என்கவுன்டர் அழைத்து வரப்பட்டனர். பின்னர், குடும்பத்தினர் வற்புறுத்துத்தலை தொடர்ந்து இரண்டு பயங்கரவாதிகள் சரணடைந்ததாக ஐஜிபி காஷ்மீர் விஜய்குமார் நேற்று தெரிவித்தார். இவர்கள் அல்-பத்ர் பயங்கரவாதிகள் ஆபிட் மற்றும் மெஹ்ராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். … Read more

ஜம்மு-காஷ்மீரில் 2 மாவட்டங்களைத் தவிர 4 ஜி மீதான தடையை நீட்டிப்பு..!

ஜம்மு-காஷ்மீரில் காண்டர்பால் மற்றும் உதம்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்களைத் தவிர அக்டோபர் 21-ம் தேதி வரை விதிக்கப்பட்ட 4 ஜி இணைய சேவைகளுக்கான தடையை மேலும்  நவம்பர் 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த ரத்து செய்யப்பட்டதால் அங்கு இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, கடந்த  ஜனவரியில்  குறைந்த வேக 2 ஜி இணைய சேவை வழங்கப்பட்டது. பின்னர், கடந்த ஆகஸ்ட் 15, அன்று உதம்பூர் மற்றும் காண்டர்பால் ஆகிய … Read more

ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்..!

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் சில நிமிடங்களுக்கு முன்பு நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.!

ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஸ்ரீநகரின் பாட்மாலூ பகுதியில் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகள் இருப்பதைப் பற்றிய தகவல் கிடைத்ததும், அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தபோது, ​​ பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இரண்டு பாதுகாப்பு படையினர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஜம்மு – ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் இரண்டு பயங்கரவாதிகள் கைது !

ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் உள்ள ஜவஹர் சுரங்கப்பாதை அருகே  ஜம்முவிலிருந்து வந்த லாரியில் சந்தேகத்திற்கிடமான இரண்டு பயங்கரவாதிகளை நேற்று இரவு பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை மற்றும் ராணுவம் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.