ஜம்மு காஷ்மீர் : 2 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றது பாதுகாப்பு படை!

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிசூடு சம்பவத்தில் 2 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாக பாதுகாப்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் ராணிபோரா பகுதியில் உள்ள குவாரிகத்தில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்திய பாதுகாப்பு படை பதிலடி கொடுத்தன. இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் அடையாளம் மற்றும் தொடர்பு குறித்து உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது என்று பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்