ஜம்மு-காஷ்மீரில் குடும்பத்தினரை சந்தித்த பின் 2 பயங்கரவாதிகள் சரண்.!

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறைக்கு தகவல்கள் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, அந்த பகுதியில் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர்.

அப்போது, பயங்கரவாதிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால், பயங்கரவாதிகளின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் அவர்களை சரணடையும்படி வற்புறுத்துவதற்காக ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் என்கவுன்டர் அழைத்து வரப்பட்டனர்.

பின்னர், குடும்பத்தினர் வற்புறுத்துத்தலை தொடர்ந்து இரண்டு பயங்கரவாதிகள் சரணடைந்ததாக ஐஜிபி காஷ்மீர் விஜய்குமார் நேற்று தெரிவித்தார். இவர்கள் அல்-பத்ர் பயங்கரவாதிகள் ஆபிட் மற்றும் மெஹ்ராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் இந்திய ராணுவம் ஒரு கூட்டு நடவடிக்கையால்  இது நடந்துள்ளது.

 

author avatar
murugan