ஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.!

ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகரின் பாட்மாலூ பகுதியில் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகள் இருப்பதைப் பற்றிய தகவல் கிடைத்ததும், அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தபோது, ​​ பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இரண்டு பாதுகாப்பு படையினர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

author avatar
murugan