தொடரும் யானைகள் உயிரிழப்பு : மத்திய அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பது தொடரும் நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானலை சேர்ந்த மனோஜ் இம்மானுவேல் மற்றும் திருச்சியை சேர்ந்த நித்திய சௌமியா யானைகள் கொடூரமாக வேட்டையாடுதல் மற்றும் யானைகள் உயிரிழப்பு குறித்து குறித்த வழக்குகளை விசாரிக்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் யானை இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் … Read more

போலீசாரின் நடவடிக்கையால் எந்த விவசாயியும் உயிரிழக்கவில்லை – மத்திய அரசு!

போலீசாரின் நடவடிக்கையால் எந்த விவசாயியும் உயிரிழக்கவில்லை என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் புதிதாக கொண்டுவரப்பட்ட வேளாண் திட்டங்களை ரத்து செய்யக் கோரி கடந்த ஓராண்டு காலமாக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். விவசாயிகளின் தொடர் போராட்டத்தின் பலனாக தற்பொழுது வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து, புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட … Read more

ஒமைக்ரான் வைரஸ் பரவல் – மாநிலங்களுக்கு மத்திய அரசு அவசர கடிதம்!

ஒமைக்ரான் வைரஸ் பரவல் தொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய அரசு அவசர கடிதம் அனுப்பியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கமே இன்னும் குறையாத நிலையில் தற்பொழுது தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில்,  இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. எனவே தென் ஆப்பிரிக்க நாடுகள் … Read more

சில நாடுகளில் புதிய வகை கொரோனா பரவுகிறது – மத்திய அரசு எச்சரிக்கை!

சில நாடுகளில் புதிய வகை கொரோனா பரவுகிறது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும் ஆங்காங்கு கொரோனா பரவல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில் தென் ஆப்பிரிக்காவில்பி.1.1.529 எனும் புதியவகை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூறியுள்ள இங்கிலாந்து சுகாதாரத்துறை, தற்போதுள்ள தடுப்பூசிகள் இந்த புதிய உருமாற்றம் அடைந்த தென் ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் கொரோனாவுக்கு … Read more

மாநிலங்களின் கையிருப்பில் 13.76 கோடி தடுப்பூசி உள்ளது – மத்திய சுகாதாரத்துறை!

மாநிலங்களின் கையிருப்பில் 13.76 கோடி தடுப்பூசி உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது மாநிலங்களின் கையிருப்பில் 13.76 கோடி கொரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை 1,13,37,12,145 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாகவும்,  தற்போது மாநிலங்களின் கையிருப்பில் 13.76 கோடி தடுப்பூசிகள் … Read more

டிக்டாக், ஹெலோ செயலிகளுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

இந்தியாவில் உள்ள பட்டித்தொட்டி முதல் நகரம் வரை உள்ள அனைத்து மக்களையும் கவர்ந்த டிக்டாக் மற்றும் ஹெலோ செயலிகலுக்கு மத்திய அரசு நோட்டீஸ் வழங்கியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து இளைஞர்கள் மற்றும் பெண்கள் தங்களது நடிப்பு திறமையை வெளிக்காட்டும் இடமாக டிக்டாக் உள்ளது. இளைஞர்கள் தங்களின் விடீயோக்களை டிக்டாக் மற்றும் இதர சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் ன் துணை அமைப்பான சுதேசி ஜாக்ரன் மஞ்சு என்ற அமைப்பு புகார் தெரிவித்துள்ளது. இது குறித்து … Read more