கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை சந்தையில் விற்க அனுமதி!

கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை சந்தையில் விற்க இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி. கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகளையும் வெளிச்சந்தையில் விற்பனை செய்வதற்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதியை இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக முன்களப்பணியாளர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டது. இதன்பின்னர் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் … Read more

மாநிலங்களின் கையிருப்பில் 13.76 கோடி தடுப்பூசி உள்ளது – மத்திய சுகாதாரத்துறை!

மாநிலங்களின் கையிருப்பில் 13.76 கோடி தடுப்பூசி உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது மாநிலங்களின் கையிருப்பில் 13.76 கோடி கொரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை 1,13,37,12,145 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாகவும்,  தற்போது மாநிலங்களின் கையிருப்பில் 13.76 கோடி தடுப்பூசிகள் … Read more

ஆஸ்திரேலியாவின் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பட்டியலில் சேர்க்கப்பட்ட கோவாக்சின்!

ஆஸ்திரேலியாவின் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பட்டியலில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் சேர்க்கப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவில் அதிக அளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால், கோவாக்சின் தடுப்பூசிக்கு இன்னும் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் இந்த கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்ட பயணிகள் ஓமன் நாட்டிற்கு தனிமைப்படுத்துதல் இன்றி செல்லலாம் என அந்நாட்டு அரசு கடந்த வாரம் தெரிவித்திருந்தது. தற்பொழுதும் இந்த கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்கள் தனிமைப்படுத்துதல் … Read more

கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது ; ஆனால் தடுப்பூசிகள் தான் தீர்ந்து விட்டது – கேரளா சுகாதாரத்துறை அமைச்சர்!

கேரளாவில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது, ஆனால் தடுப்பூசிகள் தான் தீர்ந்து விட்டது என கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தாக்கம் அண்மையில் தான் குறைந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக மீண்டும்  இந்தியாவில் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. அதிலும் குறிப்பாக கேரளாவில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிக அளவில் பரவிக் கொண்டே செல்கிறது. தினசரி கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 20,000 க்கும் … Read more

தடுப்பூசி இல்லையென்றால், நாங்கள் தூக்கில் தொங்கவா முடியும்…? – மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா

குறிப்பிட்ட அளவு தடுப்பூசிகளை தயாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு, அந்த அளவு எங்களால் தயாரிக்க முடியவில்லை என்றால் நாங்கள் என தூக்கில் தொங்க வேண்டுமா? நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், மக்களை தடுப்பூசி போடும் மாறும் அரசு அறிவித்து … Read more