ஜப்பான் மீன்பிடி கப்பலுடன் மோதிய 662 டன் எடை கொண்ட ரஷ்ய கப்பல் – 3 பேர் பலி!

9.7 டன் நண்டுகளை ஏற்றி சென்ற ஜப்பான் மீன்பிடி கப்பலுடன் ரஷ்ய கப்பல் மோதியதில், இருவர் காயமடைந்துள்ளதுடன், 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானின் வடக்கு தீவான ஹொக்கைடோவில் 662 டன் எடை கொண்ட ரஷ்ய வணிகக் கப்பலான அமுர் மற்றும் ஜப்பானிய மீன்பிடிக் கப்பலான டைஹாச்சி இரண்டும் மோதிக்கொண்டுள்ளது. இந்த விபத்தில் 9.7 டன் நண்டுகளை ஏற்றி வந்த ஜப்பான் மீன்பிடி கப்பல் கவிழ்ந்து உள்ளது. இதில் அந்த கப்பலில் இருந்த 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,08,291 பேருக்கு கொரோனா பாதிப்பு….! 4,157 பேர் உயிரிழப்பு…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,08,291 ஆகவும் இறப்பு எண்ணிக்கை 4,157 ஆகவும் பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,71,57,795 ஆக அதிகரித்துள்ளது. கடந்த கடந்த 24 மணி நேரத்தில் 2,08,291 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 21 தேதி முதல் 3 லட்சத்தை கடந்து வந்த தொற்று எண்ணிக்கை 3 லட்சத்துக்கு கீழ் இறங்கியுள்ளது. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 2,71,57,795 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இறப்பு எண்ணிக்கை … Read more

வேகமாக வந்து இரும்பு செக் போஸ்டில் மோதிய இளைஞர் உயிரிழப்பு – பதறவைக்கும் சிசிடிவி வீடியோ உள்ளே!

தெலுங்கானா மாவட்டத்தில் உள்ள இரு இளைஞர்கள் வேகமாக வந்து இரும்பு செக்போஸ்டில் மோதியதில் ஒருவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.  தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மச்செரியால் மாவட்டத்தின் ஜன்னாராம் பகுதியை நோக்கி இரு இளைஞர்கள் அதிவேகமாக பைக்கில் சென்று கொண்டிருந்தனர். எனவே தபல்பூர் சோதனை சாவடியில் வனத்துறை அதிகாரிகள் தடுப்பு கேட்டை கீழே இறக்கி இரு சக்கர வாகனத்தை நிறுத்தும் படியாக கையசைத்துள்ளனர். ஆனால் அதிவேகமாக பைக் ஓட்டி வந்த இளைஞர்கள் காவலர்களின் கை அசைவுக்கு … Read more

அசாம் பாதுகாப்பு படையினருடன் தீவிரவாதிகள் மோதல் – 8 தீவிரவாதிகள் உயிரிழப்பு!

அசாம் மாநிலத்தில் உள்ள பாதுகாப்பு படையினருக்கும் தேசிய விடுதலைப் படையை சேர்ந்த தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 8 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர். அசாம் மாநிலத்தில் உள்ள மேற்கு கர்பி அங்லாங் மாவட்டம், நாகலாந்து எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் டி எம் எல் ஏ தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக அம்மாநிலத்தின் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அந்த பகுதிக்கு தேடுதல் வேட்டைக்காக காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பிரகாஷ் சோனாவால் தலைமையில் காவல்துறை அதிகாரிகள், அசாம் … Read more

இத்தாலியில் கேபிள் கார் விபத்து – 14 பேர் உயிரிழப்பு!

இத்தாலியின் வடக்கு மலைப்பகுதிக்கு செல்லக்கூடிய கேபிள் கார் நேற்று விபத்துக்குள்ளாகியதில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தாலி நாட்டின் வடக்கே உள்ள பீடுமோண்ட் நகரில் ஸ்ட்ரெஸ்சா எனப்படுகிற கிராமத்தில் உள்ள மோகியோர் எனும் ஏரியிலிருந்து மோட்டரோன் என்ற மலைக்குன்று பகுதிக்கு செல்வதற்காக அப்பகுதியில் உள்ள மக்கள் கேபிள் கார் வசதியை உபயோகித்து வந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக இவ்வழியாக செல்வதற்கும் கேபிள் காரில் பயணிப்பதற்கு அப்பகுதியில் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு … Read more

தொடரும் மருத்துவர்களின் மரணம்…! 8 மாத கர்ப்பிணி மருத்துவர் கொரோனா தொற்றால் பலி…!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 மாத கர்ப்பிணி மருத்துவர் உயிரிழப்பு. திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் சேர்ந்த கார்த்திகா (29) முதுநிலை பயிற்சி மருத்துவர் ஆவார். இவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்தான் திருமணம் நடைபெற்றது. கர்ப்பிணியான மருத்துவர் கார்த்திகா. அவருக்கு சில தினங்களுக்கு முன்பு தான் குடும்பத்தினர் வீட்டிலேயே வைத்து சீமந்தம் நடத்தியதாக கூறப்படுகிறது. இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், திருவண்ணாமலை … Read more

இந்தியாவில் படிப்படியாக குறையும் கொரோனா பாதிப்பு…! 4 ஆயிரத்திற்கும் கீழ் சென்ற உயிரிழப்பு எண்ணிக்கை…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,40,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,3,741 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், பல மாநிலங்களில் பொது முடக்கம் ஆமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,40,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,3,741 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், … Read more

ஊரடங்கை மீறியதற்காக சிறுவனை தாங்கிய போலீசார்….! பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்…!

உத்திரப்பிரதேசத்தில் ஊரடங்கை மீறியதாக கூறி 17 வயது சிறுவனை போலீசார் தாக்கியதில், சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு. இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பல மாநிலங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. உத்திரபிரதேசத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், உன்னவ் மாவட்டம், பங்கார்மாவு நகரில் உள்ள பாத்பூரி பகுதியில், 17 வயது சிறுவன் ஒருவர் நேற்று … Read more

சீனாவில் 7.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 3 பேர் பலி; 23 பேர் காயம்!

சீனாவில் நேற்று மாலை மற்றும் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் படுகாயமடைந்துள்ளனர். சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள டாலி பகுதியில் நேற்று மாலை மற்றும் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 7.3 ரிக்டர் ஆக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள டாலியில்  நேற்று மாலை … Read more

கார் மீது டிரக் மோதி விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!

உத்தரபிரதேச மாநிலத்தில் கார் மீது டிரக் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மிரான்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிக்ரேடா கிராமத்திற்கு அருகே டிரக் கார் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காரில் இருந்த மஞ்சு, அவரது மகன் மற்றும் அவரது மகள் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பிஜ்னோரிலிருந்து வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த கார் மீது டிரக் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக … Read more