இந்தியாவில் படிப்படியாக குறையும் கொரோனா பாதிப்பு…! 4 ஆயிரத்திற்கும் கீழ் சென்ற உயிரிழப்பு எண்ணிக்கை…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,40,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,3,741 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், பல மாநிலங்களில் பொது முடக்கம் ஆமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,40,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,3,741 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தோற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,65,30,132 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,99,266 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேலும், 3,55,102 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். 28,05,399 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  நேற்று முன்தினம் 2.59 லட்சம், நேற்று 2.57 லட்சமாக இருந்த பாதிப்பு, இன்று 2.40 லட்சமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.