தயவு செய்து முக கவசம் அணியுங்கள்…! காலில் விழுந்து கும்பிடும் அதிகாரி…!

தயவு செய்து முக கவசம் அணியுங்கள்…! காலில் விழுந்து கும்பிடும் அதிகாரி…!

முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம், காலில் விழுந்து கையெடுத்து கும்பிட்டு முக கவசம் அணியுமாறு வேண்டுகோள் விடுத்த அதிகாரி. 

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும், மக்களை முகக்கவசம் அணியுமாறும், சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், இன்னும் சிலர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக தான் இருக்கின்றனர்.

இந்நிலையில், மயிலாடுதுறை அருகே, மணல்மேடு பேரூராட்சி ஊழியர்கள் ஆட்டோ மூலம் மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மணல்மேடு பேரூராட்சி அதிகாரி சுவாமிநாதன், கடை வீதிகளில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டார்.

அப்போது முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம், காலில் விழுந்து கையெடுத்து கும்பிட்டு முக கவசம் அணியுமாறு வேண்டுகோள் விடுத்தார். இந்த வீடியோ இணையத்தி வேகமாக பரவி வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube