கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் – அரசு அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 12-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தின் கொரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு 12-7-2021 முதல் 19-7-2021 காலை 6 மணி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து அரசு அறிவித்துள்ளது.அதன்படி, நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் … Read more

புறப்பட்டது ஆம்புலன்ஸ்…ராஜகிரியில் துவங்கிய பயணம் இன்று நிறைவு…

மறைந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அமைச்சர் துரைக்கண்ணு அக்13-ந்தேதி சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்ற போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.  விழுப்புரத்தில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக அக்.,14ந்தேதி சென்னை காவேரி மருத்துவமனையில்  மேல்சிகிச்சைக்காக அமைச்சர் அனுமதிக்கப்பட்டார் அதன் பின்னர் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று இருப்பதை  காவேரி மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தது. இதனையடுத்து அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில … Read more

மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்…

மறைந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்13-ந்தேதி சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்ற அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு  திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இந்நிலையில் விழுப்புரத்தில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக அக்.,14ந்தேதி சென்னை காவேரி மருத்துவமனையில்  மேல்சிகிச்சைக்காக துரைக்கண்ணு அனுமதிக்கப்பட்டார் அதன் பின்னர் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று இருப்பதை  காவேரி மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தது. இதனையடுத்து அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு தீவிர … Read more

2வது அலை வீச தொடங்கியதா?? முடங்கியது ஐரோப்பி நாடுகள்

கொரோனா பரவலின் 2வது அலை தற்போது  ஐரோப்பிய நாடுகளை தாக்கி வருகிறது.அதன்படி  பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. கொடூரமாக வீசி வரும் 2வது அலையால் இங்கிலாந்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக  இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இவ்வாறு இருக்க மேலும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் 2வது முறையாக முழு ஊரடங்கை அமல்படுத்தத் தொடங்கிவிட்டது. அதன்படி தென் ஐரோப்பாவில் உள்ள போர்ச்சுகல் நாட்டில் கொரோனா … Read more

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனாத் தொற்று

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகார் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது.பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணிக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனோ தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவித்த அவர் தன்னை சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக … Read more

நன்றிகள்….மீண்டுவிட்டேன்…பாதுகாப்பாக இருங்கள்.!

கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த நடிகர் பிரித்விராஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். தற்போது அவர் குணமடைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் நடிகர் பிரித்விராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் எனக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துவிட்டது. இன்னும் ஒருவாரத்திற்கு மட்டும் தனிமையில் இருப்பேன் அதன் பின்னர் வழக்கமான பணிகளில் ஈடுபட உள்ளேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நன்றி பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார். Tested negative on the Antigen … Read more

துணைமுதல்வர்-க்கு கொரோனாத் தொற்று

பீகார் மாநில துணை முதல்வர்  சுஷில் குமார்  மோடிக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பீகாரில் அக்., 28ந்தேதி இடைத்தேர்தல் மொத்தம் 243 இடங்களுக்கு மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. 71 இடங்களுக்கு அக்.,28ந்தேதி முதல் கட்டமாகவும், நவம்பர் 3 ஆம் தேதி 94 இடங்களுக்கு இரண்டாம் கட்டமாகவும் மீதமுள்ள 78 இடங்களுக்கு மூன்றாம் கட்டமாக நவம்பர் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தல் முடிவுகள் நவம்பர் 10 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பீகாரில் … Read more

குணமடைந்த நடிகை தமன்னா-நன்றி கூற வார்த்தையில்லை-நெகிழ்ச்சி

நடிகை தமன்னா கொரோனாத் தொற்றிலிருந்து மீண்டார். நடிகை தமன்னாவிற்கு  கொரோனா தொற்று அறிகுறிகளிலுடன் ஐதராபாத்தில்  கான்டினன்டல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்,உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே தமன்னா தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். தற்போது அவர் கொரோனாவில் இருந்து முழுவதுமாக குணம் அடைந்து விட்டார். இதுகுறித்து நடிகை தமன்னா தனது சமூகவலைத்தள பக்கத்தில் கொரோனாவில் இருந்து முழுவதுமாக குணம் அடைந்து விட்டேன். எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராக்கு தொற்று உறுதி!

அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் கடந்த அக்.,7ம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா  பங்கேற்று இருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.

கொரியாவில் கொரோனாவே கிடையாது அதிபர் கிம் ஜங் -ஷாக்கில் சர்வதேசம்

நாட்டில் யாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்து உலக நாடுகளை அதிர்ச்சியாக்கியுள்ளார். சீனாவில்  ஹூபேய் மாகாணம் வுகான் நகரத்தில்  கடந்த ஆண்டு டிசம்பரில் உலகையே அச்சிறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ்  கண்டுபிடிக்கப்பட்டது.இது தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ளது. இத்தகைய கொடிய வைரஸ் 3 கோடிக்கும்  அதிகமானோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்றுக்கு இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா விவகாரத்தில் கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு … Read more