#BREAKING: முன்னாள் காவல் ஆய்வாளர் சிபிசிஐடி போலீசாரால் கைது!

கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்த முன்னாள் காவல் ஆய்வாளர் சரவணன் கைது. அண்ணாநகர் முன்னாள் காவல் ஆய்வாளர் சரவணன் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னை திருமங்கலத்தில் தொழிலதிபர் ராஜேஷை கடத்தி சொத்துக்களை அபகரித்த புகாரில் பல மாதங்களாக தனிப்படை போலீசாரால் தேடப்பட்டு வந்த, சரவணன் தற்போது கைது செய்யப்பட்டார். கடந்த 2019ல் தொழிலதிபர் ராஜேஷை கடத்தி மிரட்டி சொத்துகளை அபகரித்த புகாரில், முன்னாள் காவல் ஆய்வாளர் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த … Read more

#Breaking:விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கு – 400 பக்க குற்றப்பத்திரிக்கை இன்று தாக்கல் செய்யும் சிபிசிஐடி!

விருதுநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன்,ஜுனைத் அகமத்,மாடசாமி,பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து,சிபிசிஐடி போலீசார் கைது செய்திருந்தனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கைதான எட்டு பேரில் நான்கு பேர் பள்ளி மாணவர்கள் என்பதால் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்தனர்.இந்த நிலையில்,கடந்த 8-ஆம் தேதி சிறார் நீதி குழும நீதிபதி … Read more

விக்னேஷ் கொலை வழக்கு – இருவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து உத்தரவு!

விசாரணை கைதி கொலை வழக்கில் இருவரை பணியிட மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவு. கடந்த ஏப்ரல் 19-ம் தேதி கஞ்சா வழக்கில் கைதான விக்னேஷ் காவல் நிலையத்தில் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக  காவலர்களை கைது செய்யுமாறு தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையம் தமிழக காவல்துறை பரிந்துரைத்திருந்த நிலையில், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தலைமை செயலக காவல் நிலைய தலைமை காவலர் குமார், காவல் … Read more

#BREAKING: கைதி விக்னேஷ் கொலை – மேலும் 4 காவலர்கள் அதிரடி கைது!

விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில் மேலும் 4 காவலர்கள் கைது. சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில் மேலும் 4 காவலர்கள் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தலைமை செயலக காவல் நிலைய தலைமை காவலர் குமார், ஊர்காவல்படை காவலர், ஆயுதப்படை காவலர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல் நிலைய எழுத்தர் … Read more

#BREAKING: விசாரணை கைதி மரணம் – மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

விசாரணை கைதி மரணம் தொடர்பான வழக்கில் சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ். விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக பதிலளிக்க சென்னை காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்குதொடர்பாக  தாமாக முன்வந்து விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம்,  விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் விக்னேஷ் காவல் நிலையத்தில் மரணமடைந்த விவகாரம் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் 4 வாரத்தில் அறிக்கை … Read more

#BREAAKING: விசாரணைக்கு கைதி மரணம் – நிவாரணத்தை திருப்பி அளிக்க குடும்பபத்தினர் முடிவு!

விசாரணை கைதி விக்னேஷ் மரண விவகாரத்தில் போலீஸ் தந்த நிவரானதுஇ திருப்பி அளிக்க குடும்பத்தினர் முடிவு. சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணத்தில் ரூ.1 லட்சம் நிவாரணத்தை திருப்பி அளிக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணையின்போது பணத்தை திருப்பி தர குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். விக்னேஷ் மரணத்தில் காவல்துறை மீது குற்றசாட்டு எழுந்த நீலையில், நிவாரண தொகையை நீதிமன்றத்தில் அளிக்க முடிவு செய்துள்ளனர். சமீபத்தில் தலைமை செயலக களனி காவல்நிலையத்தில் … Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கு – சிபிசிஐடி பதிலளிக்க அவகாசம் வழங்கி உத்தரவு!

யுவராஜின் கோரிக்கை குறித்து சிபிசிஐடி பதிலளிக்க ஜூன் 7 வரை அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு. கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜின் கோரிக்கை குறித்து சிபிசிஐடி பதிலளிக்க ஜூன் 7 வரை அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சிபிசிஐடி ஒருவாரம் அவகாசம் கேட்ட நிலையில், வழக்கை ஜூன் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. கோகுல்ராஜ் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரியும், இவ்வழக்கில் இருந்து … Read more

#JustNow: கோவையில் குண்டுவெடிப்பு – குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு!

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 24 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள 2 பேரை பிடிக்க தனிப்படை அமைப்பு. கடந்த 1998-ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வருபவர்களை பிடிக்க 3 தனிப்படைகளை சிபிசிஐடி போலீசார் அமைத்துள்ளனர். கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 24 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள டெய்லர் ராஜா, முஜிப்பூர் ரகுமான் ஆகிய 2 பேரை பிடிக்க சிபிசிஐடி தீவிரம் காட்டி வரும் நிலையில், தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த 1998-ஆம் … Read more

#BREAKING: விருதுநகர் பாலியல் வன்கொடுமை – 4 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

விருதுநகரில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர். விருதுநகரில் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹரிஹரன், ஜுனைத் அகமத், மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிபிசிஐடி போலீசார் கைது செய்திருந்தனர். இதன்பின் இந்த வழக்கில் கைதான ஹரிஹரன், ஜூனைத், மாடசாமி, பிரவீன் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் கடந்த சில நாட்களாக … Read more

சிவசங்கர் பாபா வழக்கில் சிபிசிஐடி பதிலதர உயர்நீதிமன்றம் உத்தரவு!

தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி சிவசங்கர் பாபா தொடர்ந்த வழக்கில் சிபிசிஐடி பதில்தர உத்தரவு. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சிவசங்கர் பாபா தொடர்ந்த வழக்கில் சிபிசிஐடி பதில்தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து அப்பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்சோ வழக்குகள் பதிவு செய்து கடந்த ஜூன் மாதம் … Read more