கர்நாடகாவில் கோர விபத்து: நீரில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு!

karnataka

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தின் பாண்டவபுரா அருகே, கட்டுப்பாட்டை இழந்த கார், கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்னனது. அதில் பயணித்த 5 பேர் உயிரிழந்ததாக அம்மாவட்ட காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்னர். இதனையடுத்து, சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், விஸ்வேஸ்வரய்யா கால்வாயில் இருந்து உடல்களை மீட்டதாக எடுத்ததாகவும் பலியானவர்கள் அனைவரும் கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் உள்ள திப்தூரில் வசிப்பவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள் சந்திரபாப்பா, கிருஷ்ணப்பா, தனஞ்சய், பாபு மற்றும் … Read more

ரிஷப் பந்தின் விபத்து மனவேதனை அளிக்கிறது – பிரதமர் மோடி ட்வீட்

ரிஷப் பந்தின் விபத்தால் மனவேதனை அடைந்தேன் என பிரதமர் மோடி ட்வீட். இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் இன்று அதிகாலை காரில் சென்று கொண்டிருந்த போது நெடுஞ்சாலையில் உள்ள டிவைடரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த ரிஷப் பந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பந்த் விரைவில் குணமடைய வேண்டும் என கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும் பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில், ரிஷப் பந்த் விபத்து குறித்து பிரதமர் மோடி … Read more

#CarAccident: ரிஷப் பந்த்-க்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் – பிசிசிஐ

கார் விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பந்த்-க்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிசிசிஐ அறிவிப்பு. இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் இன்று அதிகாலை காரில் சென்று கொண்டிருந்த போது உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே நெடுஞ்சாலையில் உள்ள டிவைடரில் கார் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயம் அடைந்த ரிஷப் பந்த், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரூர்க்கி நோக்கி காரை ஓட்டி செல்லும்போது ரிஷப் பந்த் கண் அசைந்ததால் விபத்து நடந்துள்ளது … Read more

ரிஷப் பந்தின் கார் விபத்து – வெளியான சிசிடிவி காட்சி!

பதறவைக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பந்தின் கார் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் பயணித்த கார் நெடுஞ்சாலையில் உள்ள டிவைடரில் மோதி பயங்கர விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது. இந்திய அணி வீரரான ரிஷப் பண்ட், டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தபோது அவரது கார் டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு மீது மோதி … Read more

அபாய கட்டத்தை தாண்டிய ரிஷப் பண்ட் – மருத்துவர்கள் தகவல்

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தகவல். கார் விபத்தில் படுகாயமடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் சென்ற கார் டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் டிவைடரில் மோதி விபத்தில் சிக்கியது. நெடுஞ்சாலையில் உள்ள டிவைடரில் மோதியதில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில், ரிஷப் பந்த்திற்கு தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் … Read more

#Shocking:பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணம்!

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்(46) கார் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் குயின்ஸ்லாந்தில் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.ஆரம்பத் தகவலின்படி,நேற்று இரவு 11 மணிக்குப் பிறகு ஆண்ட்ரூ சென்று கொண்டிருந்த கார் ஹெர்வி ரேஞ்ச் சாலையில், ஆலிஸ் ரிவர் பிரிட்ஜ் அருகே சென்ற போது கட்டுபாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து,ஆண்ட்ரூ சைமண்ட்ஸின் மறைவுக்கு … Read more

கார் விபத்து – கள்ளக்குறிச்சி துணை ஆட்சியர் உயிரிழப்பு

கார் விபத்தில் கள்ளக்குறிச்சி துணை ஆட்சியர் ராஜாமணி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே மயிலம்பாறை பகுதியில் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் பெண் சார் ஆட்சியர் ராஜாமணி உயிரிழந்தார். கார் டயர் வெடித்ததில் படுகாயம் அடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

கார் விபத்து – நடிகை யாஷிகா மீது வழக்குப்பதிவு.!

அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர் சேதம் ஏற்படுத்தியது என யாஷிகா ஆனந்த் மீது மாமல்லபுரம் போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு. தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த் நேற்று நள்ளிரவு தனது காரில் தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றுள்ளார். பார்ட்டிக்கு சென்று திரும்பியபோது, கார் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் … Read more

சினேகன் கார் மோதி விபத்தில் இளைஞர் உயிரிழப்பு..!

நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இளையரணி செயலாராகப் பொறுப்பு வகித்து வரும் சினேகன். இவர் கடந்த 15-ம் தேதி திருமயம் அருகே சவேரியார்புரத்தில் கார் ஓட்டி வந்தார். அப்போது அருண்பாண்டி என்ற இளைஞர் சென்ற இருசக்கர வாகனத்தின் சினேகன் மீது மோதினார். இந்த சம்பவத்தில் அருண்பாண்டி காயமடைந்தார். இதைத்தொடர்ந்து, அந்த இளைஞர் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிசைப்பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.