அபாய கட்டத்தை தாண்டிய ரிஷப் பண்ட் – மருத்துவர்கள் தகவல்

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தகவல்.

கார் விபத்தில் படுகாயமடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் சென்ற கார் டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் டிவைடரில் மோதி விபத்தில் சிக்கியது.

நெடுஞ்சாலையில் உள்ள டிவைடரில் மோதியதில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில், ரிஷப் பந்த்திற்கு தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கார் விபத்தில் படுகாயமடைந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment