கர்நாடகாவில் கோர விபத்து: நீரில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு!

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தின் பாண்டவபுரா அருகே, கட்டுப்பாட்டை இழந்த கார், கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்னனது. அதில் பயணித்த 5 பேர் உயிரிழந்ததாக அம்மாவட்ட காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்னர்.

இதனையடுத்து, சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், விஸ்வேஸ்வரய்யா கால்வாயில் இருந்து உடல்களை மீட்டதாக எடுத்ததாகவும் பலியானவர்கள் அனைவரும் கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் உள்ள திப்தூரில் வசிப்பவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் சந்திரபாப்பா, கிருஷ்ணப்பா, தனஞ்சய், பாபு மற்றும் ஜெயன்னா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் மைசூருவில் விழா ஒன்றை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவர்களின் கார் விபத்துக்குள்ளானது என்று காவல்துறை விசாரணையில் தெரிவித்தனர்.

தற்போது, அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.