மகர விளக்கு பூஜை – சபரிமலை கோயில் நடை திறப்பு!

மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.  கேரள மாநிலத்தில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி, ஐயப்பன் கோயிலின் நடையை திறந்து வைத்தார். அதன்படி, பதினெட்டாம் படி இறங்கி சென்று கோயில் முன் உள் அழி குண்டம் ஏற்றப்பட்டு மண்டல பூஜை தொடங்கும். சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருமுடியுடன் வரும் பக்தர்கள் நாளை முதல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். வெர்ச்சுவல் … Read more

தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் பின்பற்றப்படவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்..!

தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலின் மண்டல விளக்கு பூஜையினையொட்டி நவம்பர் 15 ஆம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டு 16 ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அதன் பின் டிசம்பர் 27 ஆம் தேதி கோயில் நடை அடைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்து சமய அறநிலையத்துறை … Read more

சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மேல்சாந்தி தேர்வு அக்,.17 என தேவஸ்தானம் அறிவிப்பு…

சபரிமலை ஐய்யப்பன் கோவில் மேல்சாந்தி தேர்வு அக்டோபர் 17ஆம் தேதி சபரிமலை சன்னிதானத்தில் நடக்கிறது. சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் அனைத்து பூஜைகளுக்கும் தலைமை வகிப்பவர் தந்திரி. இவர்கள் தாழமண் குடும்பத்தில் கண்டரரு ராஜீவரரு, கண்டரரு மகேஷ் மோகனரரு ஆகியோர் சுழற்சி முறையில் இதை கவனிக்கின்றனர். இவர்களுக்கு உதவியாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு மேல்சாந்தி நியமிக்கப்படுவார். ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட தற்போதைய மேல்சாந்தி சுதிர் நம்பூதிரியின் பதவி காலம் வரும் அக்., 16ம் தேதி நிறைவு பெறுகிறது.இந்நிலையில் அடுத்த … Read more

#தேவஸ்தானம் அறிவிப்பு-5000 பக்தர்களுக்கு அனுமதி.!

உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்கு ஒரு நாளைக்கு 5000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தேவஸ்தானம்  அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள வழிபாட்டு தலங்கள் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டும் கட்டுப்பாடுகளுடன் வழிபாடு நடத்த அறிவுறுத்தப்பட்ட நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கின் போது வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர … Read more

ஐயப்பனுக்கு மாலை போட்டு உள்ளவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டிய 18 படிகளின் மகத்துவம்!

கார்த்திகை மாதம் முதல் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருக்க ஆரம்பித்து விடுவர்.  சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள 18 படிகளுக்கு பலவித மகதத்துவம் உள்ளது. கார்த்திகை மாதம் துவங்கிய முதலே ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு சபரிமலை செல்வதற்காக கடுமையான விரதம் இருந்து வருகின்றனர். 48 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி ஐயப்பனை தரிசிப்பதற்காக சபரிமலை பயணத்தை தொடங்குகின்றனர். அப்படி தொடங்கி சபரிமலை கோவிலுக்கு சென்றவுடன் 18 படிகளை கடந்து ஐயப்பனை தரிசிக்க … Read more

சபரிமலையில் அறிமுகமாகியது ‘சுதர்ஷன்’ தரிசனம் திட்டம்..!மகிழ்ச்சியில் பக்தர்கள்

சபரிமலையில் அறிமுகமாகியது ‘சுதர்ஷன்’ தரிசனம் திட்டம். போலீசார் உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சபரிமலையில் முதியவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தரினத்திற்கு சுதர்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. முதியவர்களும்,மாற்றுத்திறனாளிகளும் தரிசனத்திற்கு சிரமப்படுவதை தடுக்கும் விதமாக ஒரு சிறப்பு வசதி செய்யப்பட வேண்டும் என்று சட்டசபைக் குழு அரசுக்கு பரிந்துரைத்தது.இதன் அடிப்படையில் சுதர்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தன்னார்வா தொண்டர்கள் தேர்வு செய்யப்பட்டு பம்பை ,நீலிமலை,அப்பாச்சிமேடு பாதையிலும்,சுவாமி ஐயப்பன் ரோட்டிலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.மலை ஏற முடியாமல் சிரமப்படுபவர்களுக்கு … Read more

வருகின்ற 6_ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் வழக்கு விசாரணை…!!

சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு பிப்ரவரி 6ஆம் தேதி விசாரணைக்கு வருகின்றது. சமீபத்தில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் இருந்துவந்த நிலையில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிராக தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.இதையடுத்து இந்த மனு வருகின்ற 6ம் … Read more