எழுத்தாளர் பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிப்பு…..!

எழுத்தாளர் பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை இலக்கியத்திற்காக மத்திய அரசால் வழங்கப்படக்கூடிய சாகித்ய அகாடமி விருது தான் பால சாகித்ய புரஸ்கார் விருது. 2020 ஆம் ஆண்டுக்கான தமிழ் மொழிப் பிரிவில் எழுத்தாளர் எஸ் பாலபாரதிக்கு இந்த  விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் பாலபாரதிக்கு இந்த விருது வழங்கப்பட்டதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது … Read more

உலகின் தலைசிறந்த பெண்மணிகளுக்கான விருதை பெற்றார் டாக்.தமிழிசை…!

பெண்கள் உரிமை, பாலின சமத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் ஆற்றிய சிறப்பான சேவைக்காக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு இன நடவடிக்கைக் குழு என்ற அமைப்பு, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறப்பான சாதனை படைத்துடன், மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த வித்திட்ட 20 பெண்களுக்கு விருதுகளை அறிவித்திருந்தது. இந்த விழா அமெரிக்காவின் இல்லினாய்ஸில் நடைபெற்றது. இந்த இருபது பெண்களின் பட்டியலில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இடம்பெற்றிருந்தார். … Read more

72-வது குடியரசு தினவிழா : தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு விருது!

இன்று நாடு முழுவதும் 72 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், குடியரசு தினத்தையொட்டி மொத்தம் 946 காவல் துறை பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இன்று நாடு முழுவதும் 72 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், இவ்வாண்டிற்கான குடியரசு தின விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தை சேர்ந்த 27 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு குடியரசு தினத்தையொட்டி மொத்தம் 946 காவல் துறை பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. … Read more

2020 ஆம் ஆண்டுக்கான தாதா சாகிப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 3 நடிகர்கள்!

தென்னிந்திய திரையுலகின் கலைஞர்களுக்கு வழங்கப்படக்கூடிய தாதா சாகேப் பால்கே விருதுக்கு 2020 ஆம் ஆண்டிற்கு நடிகர் அஜித், தனுஷ் மற்றும் நடிகை ஜோதிகா தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய திரைப்பட துறையினரால் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கு இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படக் கூடிய விருதான தாதா சாகேப் பால்கே விருது. இந்நிலையில், இந்த வருடம் 2020 ஆம் வருடத்திற்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு நடிகர் அஜித்குமார், தனுஷ், ஜோதிகா ஆகியோர் தென்னிந்திய அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த … Read more

பார்த்திபனின் ஒத்த செருப்பு – புதுச்சேரி அரசு கொடுத்துள்ள அங்கீகாரம்!

நடிகர் பார்த்திபன் அவர்களால் இயக்கப்பட்ட ஒத்த செருப்பு திரைப்படம் புதுச்சேரி அரசால் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது பெற உள்ளது. இயக்குனர் பார்த்திபன் அவர்களால் இயக்கப்பட்டு அவராலேயே நடிக்கப்பட்ட ஒத்த செருப்பு எனும் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இருப்பினும், இந்த படத்துக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று அடிக்கடி பார்த்திபன் கூறியுள்ளார். இருப்பினும் அதன்பின் பல்வேறு இடங்களில் இந்த படத்திற்கான அங்கீகாரத்தை அவர் பெற்றுள்ள நிலையில், தற்போது புதுச்சேரி அரசு சார்பில் … Read more

விருதுக்கு ஏங்குகிறேன்! பார்த்திபன் ஏக்கம்

நடிகரும் இயக்குநருமான பார்த்தபன் இயக்கி நடித்த படம் ஒத்த செருப்பு இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் பல விருதுகளை குவித்த ஒத்த செருப்பு படத்திற்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் விருது குறித்து நடிகர் பார்த்திபன் நிருபர்களிடம் நான் விருதுக்கு ஏங்குகிறேன்; என்னுடைய படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். Thanks to @IFFMelb #IFFM2020 #TogetherWithIFFM pic.twitter.com/CXpzwOvspw— Radhakrishnan Parthiban (@rparthiepan) October 20, … Read more

நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள இருவருக்கு உளம்நிறைந்த நல்வாழ்த்துகள் – பன்னீர்செல்வம்

நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்திலிருந்து தேர்வாகியுள்ள இருவருக்கு  எனது உளம்நிறைந்த நல்வாழ்த்துகள் என்று தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர் பணியில் சிறந்து விளங்குபவர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கி சிறப்பிப்பது வழக்கம். அந்த வகையில் தேசிய அளவில் இந்தாண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்காக 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு மாற்று திறனாளி ஆசிரியர்களும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கான சிறப்பு பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலை மத்திய … Read more

#BREAKING: மாரியப்பனுக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது அறிவிப்பு.!

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரிய வடகம்பட்டியை சேர்ந்த மாரியப்பன் பெயர் ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இவருடன் சேர்ந்து மல்யுத்த வீரர் வினேஷ் போகட், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மாணிகா பத்ரா பெயரையும் தேர்வுக்குழு பரிந்துரைத்தது. இதுமட்டுமில்லாமல் விளையாட்டு துறையில் உயரிய விருதான ராஜிவ் கேல் ரத்னா விருதுக்கு … Read more

3 பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருதை வழங்கினார் முதல்வர்.!

74-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றினார். தேசிய  கொடியேற்றி பின்னர் முதல்வர் சிறப்பு விருதுகளை வழங்கினார். துணிவு, சாகச செயலுக்கான தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருதை 3 பெண்களுக்கு முதல்வர் பழனிசாமி வழங்கினார். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தமிழ்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளிக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாதனுக்கு முதல்வர் சிறப்பு விருது வழங்கினார். கொரோனா … Read more

துப்பாக்கி வீராங்கனை இளவேனில் பெயர் அர்ஜினா விருதுக்கு பரிந்துரை…

கடலூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் வென்ற தங்க  மங்கை இளவேனில் வாலறிவன் துப்பாக்கிச் சுடுதலில் சாதனை புரிந்து இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து வருகிறார். இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற இளையோர் உலகக் கோப்பை போட்டியில் இளவேனில் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் இரண்டு முறை இளையோர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதேபோல்,  பிரேசிலின் ரீயோடி … Read more