#BREAKING : அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றவில்லை – சபாநாயகர்

அதிமுக உறுப்பினர்களை தான் வெளியேற்றவில்லை என்றும், அவர்களாக தான் வெளிநடப்பு செய்தனர் என்றும் சபாநாயகர் அப்பாவு  கூறியுள்ளார். நேற்று கோடநாடு விவகாரம் தொடர்பாக அதிமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சபாநாயகர் அப்பாவு தான் அதிமுகவினரை வெளியேற்றியதாக கூறப்பட்ட நிலையில், இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு அவர்கள் விளமளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அதிமுக உறுப்பினர்களை தான் வெளியேற்றவில்லை என்றும், அவர்களாக தான் வெளிநடப்பு செய்தனர் என்றும் கூறியுள்ளார். மேலும், என் … Read more

சபாநாயகர் அப்பாவு தலைமையில் தமிழக பட்ஜெட் கூட்டதொடர் தொடங்கியது…!

சபாநாயகர் அப்பாவு தலைமையில் தமிழக பட்ஜெட் கூட்டதொடர் தொடங்கியது. தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், சபாநாயகர் அப்பாவு தலைமையில், சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையடுத்து, கணினியில் பட்ஜெட்டை எவ்வாறு பார்ப்பது என்பது குறித்து சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார். மேலும், காகிதமில்லா … Read more

#BREAKING: எத்தனை நாள் பட்ஜெட் கூட்டத் தொடர்..? நாளை மறுநாள் முடிவு..!

நாளை மறுநாள் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம். சபாநாயகர் அப்பாவு தலைமையில் நாளை மறுநாள் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஆகஸ்ட் 13 இல் தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த சபாநாயகர் அப்பாவு…!

குடியரசு தலைவரை சந்தித்து, சபாநாயகர் அப்பாவு, முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் திருஉருவ பட திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் திருஉருவ பட திறப்பு விழா ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், திருவுருவப்படத்தை மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் திறந்து வைக்கிறார். இந்நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க, சபாநாயகர் அப்பாவு மேற்று டெல்லி பயணம் மேற்கொண்டார். இதனையடுத்து, … Read more

இன்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு டெல்லி பயணம்…!

இன்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு டெல்லி பயணம். தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் திருஉருவ பட திறப்பு விழா ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், திருவுருவப்படத்தை மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் திறந்து வைக்கிறார். இந்நிலையில், சபாநாயகர் அப்பாவு அவர்கள் இன்று  குடியரசுத் தலைவரை சந்திக்க டெல்லி பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படம் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை குடியரசுத் தலைவர் … Read more

#BREAKING: மின்னணு முறையில் பட்ஜெட் தாக்கல்..?- சபாநாயகர் அப்பாவு ..!

மின்னணு முறையில் பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து ஆலோசனைசெய்து வருவதாக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். சட்டப்பேரவை விதிகள் குழுவின் முதல் கூட்டத்திற்கு பின் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சட்டமன்றப் பேரவையில் காகிதம் இல்லாத பட்ஜெட்டைதாக்கல் செய்யலாமா..? அதற்கு வேண்டிய சாத்தியக்கூறுகள் என்ன..?  அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சட்டமன்றத்தில் அவர்களுக்கு முன் டச் ஸ்கிரீன் வைக்கலாமா..? அதேபோல ஒவ்வொரு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கையில் டேப்லெட் கொடுக்கவும், மேலும் ஒரு கணினி அவர்களுக்கு கொடுத்து … Read more

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.காமராஜ் எதிரான வழக்கு வாபஸ் ..!

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, காமராஜுக்கு எதிராக தொடர்ந்த வழக்குகளை சபாநாயகர் அப்பாவு வாபஸ் பெற்றார். முன்னாள் அமைச்சர்கள் ஆர்.காமராஜ், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீது  ரேஷன் அரிசி, தெருவிளக்கு எல்இடி விளக்குகள் மற்றும் திட்டங்களில் முறைகேடு செய்ததாகவும், அமைச்சர்களின் மீதான புகாரிகளில் விசாரணை நடத்த பொது செயலாளரிடம் அனுமதி பெற வேண்டுமென்ற அரசாணையையும் எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், சட்டப்பேரவை சபாநாயகர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நிலையில் சபாநாயகர் அப்பாவு வழக்குகளை திரும்பப் பெற்றார். சபாநாயகர் அப்பாவு வழக்குகளை … Read more

#BREAKING: ஜூன் 21 முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் – சபாநாயகர் அறிவிப்பு..!

தமிழக சட்டமன்ற பேரவை கூட்டம் வரும் 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் கூடுகிறது. அதன் பின் சட்டமன்ற அலுவல் கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இன்று மாலை கிண்டி ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். ஆளுநரை சந்திக்க சென்ற முதல்வருடன் அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர், உதவி அலுவலர்கள் சென்றனர். சட்டப்பேரவை கூட்டம் விரைவில் தொடங்க உள்ளதாகவும் சட்டப்பேரவை கூட்டத்தில் … Read more

சட்டப்பேரவை எப்போது கூடுகிறது..? சற்று நேரத்தில் சபாநாயகர் அறிவிப்பு..!

ஆளுநர் மாளிகையில் ஆளுநரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்கும் தேதியை சபாநாயகர் அப்பாவு மாலை 6:30 மணிக்கு அறிவிக்கிறார். சட்டப்பேரவை கூட்டம் விரைவில் தொடங்க உள்ள நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தில் உரையாற்ற ஆளுநருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கவே முதலமைச்சர் இன்று ஆளுநரை சந்திக்க சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநரை சந்திக்க சென்றுள்ள முதல்வருடன் அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர், உதவி அலுவலர்கள் சென்றுள்ளனர். கிண்டி ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகையில் … Read more

தமிழக சட்டசபை சபாநாயகராக அப்பாவு பதவியேற்பு..!

சபாநாயகர் பதவிக்கு அப்பாவும்,  துணை சபாநாயகர் பதவிக்கு  போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.  தமிழக சட்டசபைக்கான சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நேற்று பகல் 12:00 மணி வரை மனு தாக்கல் செய்யலாம் என சட்டசபை செயலர் சீனிவாசன் அறிவித்து இருந்தார். இதனால் சபாநாயகர் பதவிக்கு அப்பாவும்,  துணை சபாநாயகர் பதவிக்கு கு.பிச்சாண்டியும் மனுதாக்கல் செய்தார். சபாநாயகர் பதவிக்கும், துணை சபாநாயகர் பதவிக்கும் வேறு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதனால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். … Read more