#BREAKING: ஜூன் 21 முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் – சபாநாயகர் அறிவிப்பு..!

  • தமிழக சட்டமன்ற பேரவை கூட்டம் வரும் 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் கூடுகிறது.
  • அதன் பின் சட்டமன்ற அலுவல் கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

இன்று மாலை கிண்டி ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். ஆளுநரை சந்திக்க சென்ற முதல்வருடன் அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர், உதவி அலுவலர்கள் சென்றனர்.

சட்டப்பேரவை கூட்டம் விரைவில் தொடங்க உள்ளதாகவும் சட்டப்பேரவை கூட்டத்தில் உரையாற்ற ஆளுநருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கவே முதலமைச்சர் இன்று ஆளுநரை சந்திக்க சென்றதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, தமிழக சட்டமன்ற பேரவை கூட்டம் வரும் 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் கூடுகிறது. அதன் பின் சட்டமன்ற அலுவல் கூட்டம் நடைபெறும். சட்டமன்றம் எத்தனை நாட்கள் நடைபெறும், என்னென்ன பணிகள் என்பதை அதில் முடிவு எடுப்போம்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் நடைபெறும். பேரவையில்  பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என தெரிவித்தார்.

author avatar
murugan