குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த சபாநாயகர் அப்பாவு…!

குடியரசு தலைவரை சந்தித்து, சபாநாயகர் அப்பாவு, முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் திருஉருவ பட திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் திருஉருவ பட திறப்பு விழா ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், திருவுருவப்படத்தை மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் திறந்து வைக்கிறார்.

இந்நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க, சபாநாயகர் அப்பாவு மேற்று டெல்லி பயணம் மேற்கொண்டார். இதனையடுத்து, தற்போது சபாநாயகர் அப்பாவு, குடியரசு தலைவரை சந்தித்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் திருஉருவ பட திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். அதுமட்டுமில்லாமல், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் கடந்த 100 ஆண்டுகளில் தமிழகம் கண்ட வளர்ச்சி குறித்த “The Dravidian Model” புத்தகத்தை குடியரசுத்தலைவருக்கு அன்பளிப்பாக வழங்கி உள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.