2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டவர்கள் முகக் கவசம் அணிய தேவையில்லை – அமெரிக்க அரசு!

கொரோனாவிற்கான 2 டேஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டவர்கள் முகக் கவசம் அணிய தேவையில்லை என அமெரிக்கா நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு முகக்கவசம் அணிவதையும் சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் மக்கள் வழக்கமாக கடைபிடிக்க வேண்டும் என உலகின் பல நாடுகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது கொரோனாவின் தீவிரத்தை ஒழிக்க உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா … Read more

அமெரிக்க குடியிருப்பு பகுதியில் குதுகலமாக நடந்து சென்ற புலி – வைரல் வீடியோ உள்ளே!

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தின் மேற்கு ஹூஸ்டன் பகுதியில் புலி ஒன்று மக்கள் வசிக்கும் பகுதியில் குதுகலமாக நடந்து சென்றுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் மேற்கு ஹூஸ்டன் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக புலி ஒன்று சுற்றித் திரிந்து உள்ளது. குடியிருப்பு அதிகம் நிறைந்த பகுதியில் நடந்து திரிந்த புலியை கண்ட மக்கள் அலறியடித்து கூச்சலிட தொடங்கியுள்ளனர். மேலும் இது குறித்து காவல் துறையினருக்கும் … Read more

அமெரிக்காவில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை போட 12 முதல் 15 வயதினருக்கு அனுமதி!

அவசர கால தேவைக்கு அமெரிக்காவில் 12 வயது முதல் 15 வயதினருக்கு பைசர்  தடுப்பூசி போடலாம் என உணவு மற்றும் மருந்து கழகம் அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. அதிலும் அமெரிக்காவில் கொரோனாவின் பாதிப்பு கோரதாண்டவம் ஆடி வருகிறது. தற்பொழுது 3 கோடியே 35 லட்சத்துக்கும் அதிகமானோர் அங்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5.95 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போதும் கொரோனா வைரஸ் தீவிரம் அமெரிக்காவில் … Read more

பிறந்தநாள் வீட்டில் துப்பாக்கி சூடு – கொலையாளி உட்பட 7 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் உள்ள கொலராடாவில் பிறந்த நாளில் வீட்டிற்கு வந்த நபர் ஒருவர் அங்கிருந்த பலரையும் சுட்டு விட்டு தானும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில் உள்ள கொலராடாவில் நேற்று இரவு ஒருவர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக தனது உறவினர்களை அழைத்து உள்ளார். அங்கு பலரும் கூடியிருந்த நேரத்தில் திடீரென வந்த மர்ம நபர் ஒருவர் தனது கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து அனைவரையும் சுட ஆரம்பித்துள்ளார். இவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் … Read more

1.91 லட்சத்திற்கும் 918 ஸ்பாஞ்ச் பாப் பொம்மைகளை தவறுதலாக ஆர்டர் செய்த 4 வயது சிறுவன்!

அமெரிக்காவில் உள்ள சிறுவன் ஒருவன் அமேசானில் தவறுதலாக 918 ஸ்பான்ச் பாப் பொம்மைகளை ஆர்டர் செய்துள்ளான். அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் என்னும் பகுதியில் வசித்து வரக்கூடிய 4 வயது சிறுவன் ஒருவன் அமேசானின் தற்செயலாக 2618 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 1.91 லட்சம் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் மதிப்புள்ள ஸ்பான்ச் பாப் என்னும் கார்டூனில் வரக்கூடிய பொம்மைகளை ஆர்டர் செய்துள்ளார். அதுவும் தனது வீட்டிற்கு வரும்படி செய்யாமல் தனது அத்தை வீட்டிற்கு வருவது போல அட்ரஸை … Read more

இந்தியாவின் நிலை இதயத்தை உலுக்குகிறது – அமெரிக்க துணை அதிபர் கமலா!

இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்வதற்கு அமெரிக்கா எப்பொழுதும் தயாராக இருப்பதாகவும் தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலை இதயத்தை உலுக்கும் விதமாக இருக்கிறது எனவும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகம் ஏற்பட்டுள்ளது மற்ற நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே, இந்தியாவிற்கும் பிற நாடுகளிலிருந்து ஆக்சிஜன் உதவிகளும் … Read more

அமெரிக்காவில் உள்ள காட்டெருமைகளை கொல்ல லாட்டரிகள் விண்ணப்பித்த 45,000 பேர்!

அமெரிக்காவில் உள்ள கிராண்ட் கேன்யன் பகுதியில் உள்ள காட்டெருமைகள் அமெரிக்காவின் வளங்களை நாசம் செய்வதால் அவற்றின் எண்ணிக்கையை குறைக்குமாறு 45,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஏற்கனவே உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவில் காட்டெருமைகளால் ஒரு புறம் மக்கள் அவதிப்படுகின்றனராம். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உலகப் புகழ்பெற்ற கிராண்ட் கேன்யன் எனும் மாபெரும் பள்ளத்தாக்கு உள்ளது. இந்த பள்ளத்தாக்குகள் அருகே காட்டெருமைகள் அதிகம் சுற்றித் திரிவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கிராண்ட் கேன்யாவில் உள்ள … Read more

அமெரிக்காவில் உள்ள பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஆறாம் வகுப்பு பெண் – 3 பேர் காயம்!

அமெரிக்காவில் உள்ள ஐடோஹா எனும் பகுதியில் உள்ள நடுநிலை பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவி நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவிலுள்ள ஐடஹோ எனும் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளி ஒன்றில் படித்து வரக்கூடிய ஆறாம் வகுப்பு சிறுமி தனது கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்துள்ளார். தனது பள்ளி மாணவி மற்றும் வகுப்பு தோழர்கள் மீது இந்த பெண்மணி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 2 மாணவர்கள் மற்றும் ஒரு … Read more

ஜார்ஜ் பிளாயிட்டின் மரணம் தொடர்பான போராட்டத்தின் போது காவல் நிலையத்திற்கு தீ வைத்தவருக்கு 88 கோடி அபராதம்!

அமெரிக்க கருப்பினத்தவர் ஆன ஜார்ஜ் பிளாய்டின் மரணம் தொடர்பாக அமெரிக்காவில் வெடித்த போராட்ட நேரத்தில் போலீஸ் காவல் நிலையத்தில் தீ வைத்த அமெரிக்க நபருக்கு 12 மில்லியன் டாலர் அதாவது 88 கோடிக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கருப்பினத்தவர் ஆன ஜார்ஜ் பிளாயிட் அவர்கள் மீது கடைக்காரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸ் அதிகாரி ஒருவர் ஜார்ஜின் கழுத்தில் மண்டியிட்டு அவர் மூச்சு திணறுகிற வரை அவர் கழுத்தில் அழுத்தம் கொடுத்ததால் ஜார்ஜ் பரிதாபமாக … Read more

உறங்கிக் கொண்டு பயணித்த படியே கார் டிரைவரின் கழுத்தை நெரித்த பெண்மணி!

அமெரிக்காவில் உறங்கிக் கொண்டு பயணித்தபடியே கால் டாக்சி டிரைவரின் கழுத்தை நெறித்து நெஞ்சைக் கீறிய பெண்மணி. அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை சேர்ந்த 55 வயதுடைய பெண்மணி ஒருவர் கார் ஒன்றை முன்பதிவு செய்து உள்ளார். உபேர் கார் டிரைவரான 22 வயதுடைய இளைஞர் ஒருவர் பெண்மணியை ஏற்றுவதற்காக வந்துள்ளார். அதன்பின் இருவரும் பயணித்துக்கொண்டிருந்த போதே இடையிலேயே அந்தப் பெண்மணி திடீரென கார் டிரைவரின் கழுத்தை நெரித்து மார்பிலும் கழுத்திலும் நகத்தை வைத்து கீற ஆரம்பித்துள்ளார். என்ன செய்வதென்று … Read more