வீட்டில் வைத்து தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண்..! பரிதாபமாக உயிரிழந்த குழந்தை..!

கோவையில் வீட்டில் வைத்து பெண் ஒருவர் தானாக பிரசவம் பார்த்ததால், குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு. இன்று தொழில் நுட்பங்கள் வளர்ந்துள்ள காலகட்டத்தில்,  சமையல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை இணையத்தில் பார்த்து பலரும் தெரிந்து கொள்கின்றனர். ஆனால் பிரசவம் என்பது அப்படி அல்ல, மருத்துவர்களால்  பார்க்கப் பட்டால் தான் அது பாதுகாப்பான ஒன்றாக இருக்கும். இல்லையென்றால், அது ஆபத்தில் தான் போய் முடியும். இந்நிலையில் கோவை செட்டி வீதியில் வசித்து வருபவர்கள் விஜயகுமார் -புண்ணியவதி தம்பதியினர். இவர்களுக்கு … Read more

‘சூர்யாவை எட்டி உதைத்தால் ரூ.1 லட்சம் பரிசு’ – சித்தமல்லி பழனிச்சாமி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு…!

மயிலாடுதுறை மாவட்ட பாமக செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ஜெய்பீம் திரைப்படம் அனைத்து தரப்பு மக்கள் மதியம் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் முதற்கொண்டு பாராட்டுக்களை தெரிவித்துள்ள நிலையில், இப்படத்தை குறித்த எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், பாமக கட்சி நிர்வாகி சித்தமல்லி பழனிசாமி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, … Read more

ஆசிரியர் கண்டிப்பது மாணவனை தற்கொலைக்கு தூண்டுவதற்கு ஒப்பானது அல்ல – உச்சகநீதிமன்றம்

ஆசிரியர் கண்டிப்பது மாணவனை தற்கொலைக்கு தூண்டுவதற்கு ஒப்பானது அல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள புனித சேவியர் பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த ஜியோ வர்க்கீஸ் என்ற ஆசிரியர், 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவனை கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவன் எழுதிய கடிதத்தின் அடிப்படையில், உடற்கல்வி ஆசிரியர் தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில், வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அளித்த மனு … Read more

தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட எஸ்.ஐ…!

தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட உதவி காவல் ஆய்வாளர்.  செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட மேலகோட்டையூர் பகுதியில் உள்ள காவல் குடியிருப்பில் வசித்து வந்தவர் கவுதமன் (59). இவர் விஐபிகளுக்கு பாதுகாப்பு பணியில் இருந்து வந்தார். இதையடுத்து சென்னை நீதிபதி ஒருவருக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். பின் இவர் கடந்த ஒரு வாரமாக சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பீகார் மாநிலம் பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அருண் … Read more

முருகானந்தம் மற்றும் அவரது மனைவி காந்திமதி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு…!

முருகானந்தம் மற்றும் முள்ளங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் அவரது மனைவி காந்திமதி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கடுக்காக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவர், புதுக்கோட்டை மாவட்டம் ஊரக வளர்ச்சித்துறையில், உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவரது வீடு மற்றும் இவரது சகோதரர்கள்  மூவருக்கு தொடர்புள்ள 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை  மேற்கொண்டு வருகின்றனர். ஏனென்றால், இவரது சகோதரர்கள் பழனிவேல் அதிமுக ஆட்சியில், முன்னாள் அமைச்சர் வேலுமணியிடம் ஒப்பந்தம் பெற்று உள்ளாட்சி துறை … Read more

ஓபிஎஸ் உட்பட 63 எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு..!

கலைவாணர் அரங்கம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் உட்பட 63 எம்எல்ஏக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கும் மசோதாவை, சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து, இந்த மசோதாவை கண்டித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் கலைவாணர் அரங்கம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்களை கைது செய்து  போலீசார் வாகனத்தில் அழைத்து சென்று பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், … Read more

‘இனிமே வீட்டுக்கு வரமாட்டேன், குட்பை’ – தடை செய்யப்பட்ட பப்ஜி கேமால் பறிபோன 10 லட்சம்…!

தடைசெய்யப்பட்ட பப்ஜி  கேமை விளையாட, தாயாரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.10 லட்சத்தை பயன்படுத்திய சிறுவன்.  இளைஞர்களை எந்த எல்லைக்கும் செல்ல வைக்கும் ஆன்லைன் கேமிங் அடிமைத்தனத்தின் மற்றொரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பப்ஜி ஆன்லைன் கேமானது தடை செய்யப்பட்டிருந்தாலும், இன்றும் சிலர் சட்டவிரோதமாக விளையாடிக் கொண்டுதான் இருக்கின்றனர். அந்த வகையில் இந்த விளையாட்டால் பலர் பணத்தை இழந்தாலும், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் தனது வீட்டிற்கு தெரியாமல் … Read more

கமல் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து விவகாரம்… வழக்கு பதிந்தது தமிழக காவல்துறை…

பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்து வரும் படம் ‘இந்தியன்-2’. இதன் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி. பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு மிக உயரமான ராட்சத கிரேனில் மின்விளக்குகளை பொருத்தும் போது,  எதிர்பாராத விதமாக கிரேன் திடீரென சரிந்து விழுந்த விபத்துக்குள்ளானது .இதில், உதவி இயக்குனர் கிரு‌‌ஷ்ணா, கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். … Read more