செய்தியாளர்கள் சந்திப்பில் தூங்கி வழிந்த ராஜாஸ்தான் மாநில முதல்வரின் ஆலோசகர்.! வைரலாகும் வீடியோ…

ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் ஆலோசகரும், சுயேச்சை எம்எல்ஏவுமான சன்யம் லோதா பத்திரிகையாளர் சந்திப்பின் போது தூங்கியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகாலம் நிறைவடைந்ததை முன்னிட்டு கடந்த 4 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியின் போது செய்யப்பட்ட சாதனைகளை விளக்கும் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் ஆலோசகரும், சுயேச்சை எம்எல்ஏவுமான சன்யம் லோதா, அந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது தூங்கியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி … Read more

தனது அத்தையை துண்டு துண்டாக வெட்டி டெல்லியில் வீசிவிட்டு காணவில்லை என கூறிய கொடூர கொலையாளி.!

ராஜஸ்தான் மாநில இளைஞர் தனது அத்தையை கொன்று துண்டு துண்டாக வெட்டி டெல்லியில் வீசிய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் அனுஜ். இவர் தனது அத்தையை சுத்தியலால்அடித்து கொன்று, கத்தி மற்றும் மார்பிள் கல் வெட்டும் கருவி கொண்டு அவரது உடலை பல துண்டுகளாக வெட்டியுள்ளார். பின்னர் அந்த உடல் பாகங்களை, டெல்லியில், புறநகர் பகுதியில் வீசிவிட்டு,, தனது அத்தையை காணவில்லை என அனுஜே போலீசாரிடம் கூறியுள்ளார். பின்னர் போலீசார் விசாரணை தொடங்கி, … Read more

ராஜஸ்தான் : திருமண நிகழ்வில் சிலிண்டர் வெடித்து கோர விபத்து.! உயிரிழப்பு 32ஆக உயர்வு.!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் திருமண நிகழ்வில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் ஷேர்கர் அருகே உள்ள புங்ராவில் திருமண நிகழ்வு நடைபெற்ற போது சிலிண்டர்வெடித்து பெரிய விபத்து ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். இதுவரை சிலிண்டர் வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32ஆக உயர்ந்துள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் ராஜேந்திர … Read more

மனைவியை கொன்றதாக சிறை சென்ற முதல் கணவன்.! ஜாமீனில் வந்து மனைவியை உயிருடன் மீட்ட சுவாரஸ்யம்.!

உத்தரப்பிரதேசத்தில்  மனைவியை கொன்றதற்காக சிறையில் இருந்த கணவன் ஜாமீனில் வெளியே வந்து தனது மனைவியை உயிருடன் கண்டுபிடித்துள்ளார்.  உத்திர பிரதேச மாநிலத்தில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது. நமக்கு அது சுவராஸ்ய செய்தி. ஆனால் அவருக்கோ அது செய்யாத குற்றத்திற்கு வருடக்கணக்கில் சிறைவாசம் அனுபவித்த வேதனை. உத்திர பிரதேச மாநிலத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு, சோனு சைனி மற்றும் அவரது நண்பர் கோபால் சைனி ஓர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். சோனு சைனியின் மனைவி ஆர்த்தி … Read more

டீசல் இல்லாத 108 ஆம்புலன்ஸ்.. உறவினர்கள் தள்ளிச் சென்ற அவலம்.! நோயாளி உயிரிழப்பு.!

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில், தனப்பூர் எனும் பகுதியை சேர்ந்தவர் தேஜ்யா. 40 வயதான இவர்திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். இதனை அடுத்து, அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அதில் இவரை தனப்பூர் மருத்துவமனைக்கு கொன்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் பாதியில் டீசல் இன்றி ஆம்புலன்ஸ் நின்றுவிட்டது. இதனை அடுத்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ஆம்புலன்ஸை தள்ளிக்கொண்டு மருத்துவமனை சென்றுள்ளனர். ஆனால், துரதிஷ்டவசமகாக தேஜ்யா மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பாகவே உயிரிழந்துவிட்டார். ஆம்புலன்ஸ் வாகனம் டீசல் … Read more

ஒற்றுமை யாத்திரையில் முத்தம் கொடுத்த ராகுல் காந்தி.! பாஜக பிரமுகருக்கு பதிலடி கொடுத்த பெண் எம்எல்ஏ.!

ராகுல்காந்தி முத்தமிடும் புகைப்படத்தை பதிவிட்ட டிவீட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக பெண் எம்எல்ஏ திவ்யா மதேர்னா பாஜக தொண்டருக்கு பதில் அளித்துள்ளார்.  கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் நடைபயணமாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவர் தற்போது ராஜாஸ்தான் மாநிலத்தில் தனது நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த நடைப்பயணத்தின் போது, ராகுல் காந்தி, ராஜஸ்தான் பெண் எம்எல்ஏ திவ்யா மதேர்னாவுக்கு தலையில் முத்தம் கொடுத்திருப்பார். இந்த புகைப்படத்தை பதிவிட்டு, பாஜக தொண்டர் அருண் … Read more

ஆபரேசன் சக்ரா.. 105 இடத்தில் சோதனை… 1.5 கிலோ தங்கம் பறிமுதல்.! சிபிஐ அதிரடி.!

சைபர் குற்றங்கள் தொடர்பாக நாடு முழுவதும் நடைபெற்ற சோதனையில் 1.5 ரொக்க பணமும், 1.5 கோடி மதிப்புள்ள தங்கத்தையும் சிபிஐ அதிகரிகள் கைப்பற்றினர்.    இணைய வழியில் மக்களை ஏமாற்றும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . இதனை தடுக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது. அமெரிக்கவை சேர்ந்த இன்டர்போல் காவல் அமைப்பும், சர்வதேச எஃப்.பி.ஐ அமைப்பும் இந்திய அரசுக்கு கொடுத்த ரகசிய தகவலின் பேரில் சிபிஐ … Read more

புதிய காங்கிரஸ் கட்சி தலைவர் அசோக் கெலாட்.? ராஜஸ்தான் அடுத்த முதல்வர் யார்.?! வெளியான ரிப்போர்ட்….

அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், ராஜஸ்தான் மாநில முதல்வராக கட்சி யாரை அறிவிக்கிறார்களோ அவர்களை முதல்வராக ஏற்றுக்கொள்வோம் என ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அறிவித்துள்ளனர்.  இந்திய காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்  போட்டியிட உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. காங்கிரஸ் தேசிய தலைவராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டு விட்டார். கட்சி விதிகளின்படி அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அப்படி செய்தால் ராஜஸ்தான் … Read more

வயதான தந்தையை தெருவில் வைத்து அடித்த மகன்..வைரலாகும் வீடியோ!!

ராஜஸ்தானில் வயதான தந்தையிடம் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், ஒருவர் வயதான தந்தை தெருவில் வைத்து அடித்துள்ளார். அதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலானதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அந்த நபர் தனது தந்தையுடன் வீட்டு விஷயங்களில் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைத்தளங்களில் வைரலாக அந்த வீடியோவில்,வயதான ஒரு நபரை ஒரு இளைஞர் தெருக்களில் வைத்து தாக்குவது … Read more

இரண்டு பெண் உளவாளிகளிடம் ஏமாந்து போன இந்திய ராணுவ வீரர்.! வெளியான அதிர்ச்சி தகவல்…

ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவத்தில் பணியாற்றி வரும் 24 வயது மதிக்கதக்க ராணுவ வீரர், இரண்டு பெண் உளவாளிகளிடம் ஏமாற்றப்பட்டுள்ளார்.  ராஜஸ்தான் மாநிலத்தில் பணியாற்றி வரும் 24 ராணுவ வீரரிடம் இரு பெண்கள், இவரிடம் பழகியதாக தெரிகிறது. அதன் காரணமாக இவர் ராணுவ பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் , வீடியோக்களை அந்த பெண்களுடன் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு தான் அந்த இரு பெண்களும் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து … Read more