செய்தியாளர்கள் சந்திப்பில் தூங்கி வழிந்த ராஜாஸ்தான் மாநில முதல்வரின் ஆலோசகர்.! வைரலாகும் வீடியோ…

ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் ஆலோசகரும், சுயேச்சை எம்எல்ஏவுமான சன்யம் லோதா பத்திரிகையாளர் சந்திப்பின் போது தூங்கியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகாலம் நிறைவடைந்ததை முன்னிட்டு கடந்த 4 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியின் போது செய்யப்பட்ட சாதனைகளை விளக்கும் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் ஆலோசகரும், சுயேச்சை எம்எல்ஏவுமான சன்யம் லோதா, அந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது தூங்கியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment