மனைவியை கொன்றதாக சிறை சென்ற முதல் கணவன்.! ஜாமீனில் வந்து மனைவியை உயிருடன் மீட்ட சுவாரஸ்யம்.!

உத்தரப்பிரதேசத்தில்  மனைவியை கொன்றதற்காக சிறையில் இருந்த கணவன் ஜாமீனில் வெளியே வந்து தனது மனைவியை உயிருடன் கண்டுபிடித்துள்ளார். 

உத்திர பிரதேச மாநிலத்தில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது. நமக்கு அது சுவராஸ்ய செய்தி. ஆனால் அவருக்கோ அது செய்யாத குற்றத்திற்கு வருடக்கணக்கில் சிறைவாசம் அனுபவித்த வேதனை.

உத்திர பிரதேச மாநிலத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு, சோனு சைனி மற்றும் அவரது நண்பர் கோபால் சைனி ஓர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். சோனு சைனியின் மனைவி ஆர்த்தி என்பவரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, அவர்கள் 2016ஆண்டே சிறைத்தண்டனை பெற்றுள்ளனர்.

அவர்கள் அண்மையில் ஜாமீனில் சோனு சைனி மற்றும் அவரது நண்பர் கோபால் சைனி இருவரும் வெளியே வந்துள்ளனர். அப்போது, சோனு சைனி தனது மனைவியை அவரது இரண்டாவது கணவருடன் ராஜஸ்தானில் வசித்து வருவதை கண்டுபிடித்துள்ளார். இப்போது நாங்கள் கொலை செய்யவில்லை. இறந்து போனதாக கூறிய ஆர்த்தி இதோ இருக்கிறார்கள் என ஆதாரத்துடன் போலீசாரிடம் சோனு சைனி மற்றும் அவரது நண்பர் கோபால் சைனி கூறியுள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment