#Breaking:இலங்கைக்கு உதவி;மனிதாபிமான செயல் – முதல்வர் ஸ்டாலின் நன்றி!

இலங்கையில் அத்தியவசிய பொருட்கள் விலை உயர்வு,உயிர்காக்கும் மருந்துகள்,எரிபொருள் போன்றவற்றிற்கு தட்டுப்பாடு நிலவுகிறது.இந்த சூழலில்,இலங்கைக்கு ரூ.80 கோடி மதிப்புள்ள 40,000 டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்புள்ள 137 அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், ரூ.15 கோடி மதிப்புள்ள 500 டன் பால் பவுடரை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது எனவும், இந்திய தூதரகம் வழியாக தான் இலங்கை மக்களுக்கு உதவி பொருட்களை அனுப்பி வைக்க முடியும் என்பதால் தேவையான உதவிகள் மற்றும் ஏற்பாடுகளை செய்து தரக் கோரி … Read more

#Breaking:முக்கிய கோரிக்கை – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கடிதம்!

கடந்த மார்ச் 23 ஆம் தேதியன்று இலங்கை கடற்படையினரால், தமிழகத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இதனையடுத்து,மீனவர்களை விடுவிக்க ஜாமீன் தொகையாக தலா ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில்,தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிப்பது மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கூறி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். மேலும்,அக்கடிதத்தில்,இலங்கை நீதிமன்றத்தின் இந்தச் செயல் … Read more

தமிழக மாணவர்களை விரைந்து மீட்க வேண்டும் – அமைச்சர் ஜெய்சங்கரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை விரைந்து மீட்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.  உக்ரைன் மீது ரஷ்யா ராணுவம்  கடந்த 5 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய  படைகள் உக்ரைனில்  சில நகரங்களை கைப்பற்றியுள்ளது. இதற்கிடையில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.  மேலும், உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் … Read more

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு, இணையமைச்சர் எல்.முருகன் கடிதம்..!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 55 தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு, இணையமைச்சர் எல்.முருகன் கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 55 தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு, இணையமைச்சர் எல்.முருகன் கடிதம் எழுதியுள்ளார். இதற்கு முன்னதாக தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி … Read more

தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்..!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 68 மீனவர்களை விடுவிக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 68 மீனவர்களை விடுவிக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 68 தமிழக மீனவர்களையும், 75 விசைப்படகுகளையும் மீட்க மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் விரைந்து நடவடிக்கை … Read more